சிறுமிக்கு எடாகூடமாக மெசேஜ்! கேரள இளைஞரை பிரிட்டனில் தட்டித்தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!

Published : Nov 26, 2025, 03:23 PM IST
jithin jose child abuse

சுருக்கம்

பிரிட்டனின் ஸ்டாக்போர்ட்டில், 13 வயது சிறுமிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மலையாளி இளைஞர் ஜிதின் ஜோஸ் கைது செய்யப்பட்டார். தேவாலய ஊழியராகவும், மதபோதகராகவும் இருந்த இவர், சைல்டு ஆன்லைன் சேஃப்டி டீம் மூலம் பிடிபட்டார் மற்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

13 வயது சிறுமிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய கேரளாவை சேர்ந்த இளைஞர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். பிரிட்டனின் ஸ்டாக்போர்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கோட்டயம் குறுவிலங்காடு பகுதியைச் சேர்ந்த ஜிதின் ஜோஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டார். ஆல்வின் ஆபிரகாம் என்ற பெயரில் ஜிதின் மைனர் சிறுமிகளுடன் ஆபாச சாட்டிங் செய்துள்ளார். 

சிறுமி மைனர் என்று தெரிந்தே சாட்டிங் செய்ததாக ஜிதின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கைதை தொடர்ந்து, ஜிதினிடம் விசாரணை நடத்துவதும், அவர் குற்றத்தை ஒப்புக்கொள்வதும் போன்ற வீடியோவை சைல்டு ஆன்லைன் சேஃப்டி டீம் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. 13 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளுடன் ஜிதின் பாலியல் ரீதியாக பேசியதை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலாக 13 வயது சிறுமிக்கு ஜிதின் ஆபாச மெசேஜ் அனுப்பி வந்ததாக போலீசார் விளக்கியுள்ளனர்.

தேவாலய ஊழியர் மற்றும் மதபோதகர் கைது

11 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளின் தந்தையான ஜிதின், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்துள்ளார். செவிலியராகப் பணிபுரிந்த ஜிதின், தற்போது பராமரிப்பு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். பிரிட்டனின் ஸ்டாக்போர்ட்டிற்கு வந்ததிலிருந்து, தேவாலயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஜிதின், தேவாலய ஊழியராகவும், மத வகுப்புகள் எடுப்பவராகவும் இருந்துள்ளார். அவரது கைது ஸ்டாக்போர்ட்டில் உள்ள மலையாளி சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மது போதையில் இது நடந்ததாக கதறல்

13 வயது சிறுமிக்கு ஜிதின் ஆபாச வீடியோக்களையும் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மது போதையில் இது நடந்ததாக ஜிதின் போலீசாரிடம் விளக்கியுள்ளார். ஜிதினின் தொலைபேசியை தொடர்ந்து கண்காணித்த பின்னரே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணை முடிந்ததும், அவருக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைத்தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது. தண்டனை பெற்றால், தற்போதைய பிரிட்டிஷ் கொள்கையின்படி, நாடு கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம். நண்பர்களுடன் இரவு விருந்துக்கு வந்தபோது ஜிதின் கைது செய்யப்பட்டார். கிரிப்ஸி என்ற இடத்தில் உள்ள ஒரு காட்டேஜில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!