தன் பெற்றோரும் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் ஷாலோம் ஷீபா பெற்றோரைப் பார்ப்பதற்காக ஆசையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை மாரிமுத்து மகளை வீட்டுக்குள் விடாமல் தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மகளைத் தந்தையே அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாசி மாவட்டம் ஊத்துமலை அருகே தெற்கு காவலாகுறிச்சி ஆர்.சி.கோவில் தெருவைச் சேர்ந்த அந்தோணி மகன் மாரிமுத்து (45). கூலித் தொழிலாளியான அவரது மகள் ஷாலோம் ஷீபா(19). அதே ஊரைச் சேர்ந்த கடந்த இரு வருடங்களாக தனது உறவுக்காரரான முத்துராஜ் என்பவரைக் காதலித்துள்ளார்.
இருவரின் காதல் விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததும் ஷாலோம் ஷீபாவின் தந்தை மாரிமுத்து கடுமையாக எதிர்த்துள்ளார். அதனால் காதலர்கள் இருவரும் இரண்டு முறை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால், பெற்றோர் அழைத்துவந்து பிரித்து வைத்தனர். இருப்பினும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த மாரிமுத்து மகளை வெறுக்கத் தொடங்கியதும் இனி எனது வீட்டிற்கு வந்துவிடாதே என கூறி சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே கிராமத்தில் மாரிமுத்து வீட்டருகே நடந்த மாரியம்மன் கோயில் கொடை விழாவில் காதல் திருமணம் செய்து கொண்ட காதல் திருமணம் செய்த தம்பதியினர் இருவரும் தரிசனம் செய்தனர். பின்னர், தன் பெற்றோரும் தன்னை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில் ஷாலோம் ஷீபா பெற்றோரைப் பார்ப்பதற்காக ஆசையுடன் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை மாரிமுத்து மகளை வீட்டுக்குள் விடாமல் தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
மகள் காதல் திருமணம் செய்தது பிடிக்காமல் ஆத்திரத்தில் இருந்த மாரிமுத்து அரிவாளை எடுத்து வந்து ஷாலோம் ஷீபாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலோம் ஷீபா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மகளை வெடடடி கொலை செய்த தந்தையை சிறையில் அடைத்தனர்.