ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் திடீர் கைது..! வெளியான பகீர் தகவல்

Published : Jul 30, 2023, 10:40 AM IST
ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் திடீர் கைது..! வெளியான பகீர் தகவல்

சுருக்கம்

கொடாநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் தனபாலை  நில மோசடி வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 

கொடநாடு கொலை வழக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான  கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதனை தடுக்க முற்பட்ட காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் திடீர் என உயிர் இழந்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையானது தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது கோடநாடு வழக்கில் சாட்சியங்களை கலைத்ததாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி காவல் துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

நிலம் மோசடி வழக்கில் கைது

இந்தநிலையில் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள எருமைப்பட்டி பகுதியில் உள்ள வாசுதேவனுக்கு சொந்தமான இடத்தை 5 கோடிக்கு துரையரசுக்கு விற்பனை செய்துள்ளார். இந்த நிலம் வாங்குவதில் இடைத்தரகராக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் இருந்துள்ளார். இந்தநிலையில் பத்திரப்பதிவு முடிந்த நிலையில் குறிப்பிட்டப்படி துரையரசு 5 கோடி ரூபாய் பணம் கொடுக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து வாசுதவேன் கொடுத்த புகாரின் பேரில் இடைதரகராக செயல்பட்ட  ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் அண்ணன் தனபாலை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் துரையரசுவை போலீசார் தேடி வருகின்றனர்.  

இதையும் படியுங்கள்

கொடநாடு கொலை வழக்கு..! குற்றவாளி யார்.? மேற்குவங்கத்தில் விசாரணை- சிபிசிஐடி தகவல்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!