குளிப்பதை வீடியோ எடுத்து இளம்பெண், ஆண்டிகளுடன் இளைஞர் உல்லாசம்..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 7:47 PM IST
Highlights

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த முப்பத்தி கோட்டகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜூவா மகன் பாரதிராஜா(25). இவர் கடந்த சில மாதங்களாக முப்பத்தி கோட்டகம் கிராமத்தில் உள்ள குளங்களில் பெண்கள் குளிப்பதை அவர்களுக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களடன் உல்லாசம் அனுபதித்து வந்துள்ளார். 

நாகையில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பெண்களை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த முப்பத்தி கோட்டகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜூவா மகன் பாரதிராஜா(25). இவர் கடந்த சில மாதங்களாக முப்பத்தி கோட்டகம் கிராமத்தில் உள்ள குளங்களில் பெண்கள் குளிப்பதை அவர்களுக்கே தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வந்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களை காண்பித்து சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டி அவர்களடன் உல்லாசம் அனுபதித்து வந்துள்ளார். 

இந்நிலையில், ஒரு பெண்ணு்டன் தவறாக இருந்த புகைப்படம் ஒன்றை அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இதை பார்த்த பெண்ணின் சகோதரர் கடந்த 8ம் தேதி பாரதிராஜாவிடம் இதுகுறித்து கேட்டார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தான் வைத்திருந்த  செல்போனை பாரதிராஜாவே உடைத்து எறிந்துவிட்டார். 

இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர் பாரதிராஜாவை தாக்கினார். மேலும், இதுகுறித்து திருக்குவனை காவல் நிலையத்தில் பாரதிராஜா மீது புகார் அளித்தார். இந்நிலையில், பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட சிலர் தாக்கியதாக கூறி பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு  பின்னர் வீடு திரும்பினார். இதனையடுத்து, போலீசார் விசாரணை நடத்திய பின் பாரதிராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!