3 ஆண்டுகளாக கணவருக்கு தெரியாமல் உல்லாசம்.. விஷயம் தெரிந்ததால் மண்வெட்டியால் போட்டு தள்ளிய மனைவி..!

By vinoth kumarFirst Published Sep 19, 2021, 5:21 PM IST
Highlights

3 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த இவர் இதுகுறித்து மனைவி நதியாவிடம் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கள்ளக்காதலை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்த மனைவி கணவனை மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(46). கார் டிரைவர். இவரது மனைவி நதியா(33). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். ஜெகதீசன் அடிக்கடி சவாரிக்காக வெளியூர் சென்று வருவது வழக்கம்.  அதேபோல், அடிக்கடி வீட்டிற்கு குடித்து விட்டு வருதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நதியாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. மேலும், இவர்களின் கள்ளக்காதல் 3 வருடத்திற்கு மேலாக நீடித்து வந்துள்ளது. கணவர் ஜெகதீசன் இல்லாத போது நதியா கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த இவர் இதுகுறித்து மனைவி நதியாவிடம் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நதியா கள்ளக்காதலனிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, வீட்டிற்கு வந்த ஜெகதீசன் இதுகுறித்து கேட்டதால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த நதியா வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து வந்து கணவர் ஜெகதீசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகதீசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜெகதீசன் மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!