அடிப்பாவி! காதல் கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த கொடூர மனைவி! என்ன காரணம் தெரியுமா?

Published : Aug 01, 2024, 02:24 PM ISTUpdated : Aug 01, 2024, 02:26 PM IST
 அடிப்பாவி! காதல் கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த கொடூர மனைவி! என்ன காரணம் தெரியுமா?

சுருக்கம்

கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். 

இன்ஸ்டாகிராமில் பழகிய காதலனுக்காக கூலிப்படையை ஏவி காதல் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டம் சிஞ்சுலி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(30). இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தும்கூரை சேர்ந்த ஹர்ஷிதா(28) என்ற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இதையும் படிங்க: பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை போட்டு தள்ளிய மனைவி! 18 வயது மகனும் உடந்தை! ஓராண்டுக்கு பின் சிக்கியது எப்படி?

இந்நிலையில், ஹர்ஷிதாவிற்கு  இன்ஸ்டாகிராமில் குண்டா என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், கணவர் உயிருடன் இருக்கும் வரை நாம் சேர்ந்து வாழ முடியாது என்பதால் அவரை கொலை செய்ய  ஹர்ஷிதா திட்டமிட்டார். 

இதையும் படிங்க:  வேலை கிடைத்ததற்காக ட்ரீட் வைத்த இளம் பெண்; தோழியையே விருந்தாக்கிய நண்பர்கள்

அதன்படி பிரகாஷை தனியாக அழைத்து சென்ற ஹர்ஷிதா கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையை ஏவியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி ஹர்ஷிதாவிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இன்ஸ்டாகிராம் காதலனுக்காக கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஹர்ஷிதா, சோமசேகர், ரங்கஸ்வாமய்யா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான குண்டாவை தேடி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?