வேறொருவருடன் மனைவி கள்ளக்காதல்...? ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்ட கொன்ற கணவன்..!

Published : Feb 03, 2020, 03:48 PM ISTUpdated : Feb 03, 2020, 04:24 PM IST
வேறொருவருடன் மனைவி கள்ளக்காதல்...? ஆத்திரத்தில் தலையில் கல்லைப்போட்ட கொன்ற கணவன்..!

சுருக்கம்

சேலம் அருகே மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், காளிமுத்து மற்றும் ராஜம்மாள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். காளிமுத்து தனது மனைவி ராஜம்மாள் மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைத்த கணவர் ஆத்திரத்தில் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து. அவரது மனைவி ராஜம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், காளிமுத்து மற்றும் ராஜம்மாள் இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எம்.பி.கே.புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். காளிமுத்து தனது மனைவி ராஜம்மாள் மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு முற்றிய போது ஆத்திரத்தில் மனைவியை கடுமையாக தாக்கி தலையில் கல்லை போட்டு காளிமுத்து கொலை செய்துள்ளார். பின்னர், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் காளிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!