எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் கணவர் செய்த பகீர் செயல்..!

By vinoth kumarFirst Published Jan 21, 2022, 9:10 AM IST
Highlights

தனலட்சுமிக்கும், அப்பகுதியை சேர்ந்த காட்டுராஜா (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் குமாருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வஞ்சிப்பாளையம் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் (31). இவரது மனைவி தனலட்சுமி (25). குமார் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை கணவன்-மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமார் அரிவாளால் தனலட்சுமியை சரமாரி வெட்டினார். இதில் அவரது தலை, கழுத்து உள்பட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். திடீரென தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்த போது அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். ரத்த கரை படிந்த அரிவாளுடன் கணவர் அருகில் இருந்தார். 

இதையும் படிங்க:- நண்பர் மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. ஆத்திரத்தில் கணவர் செய்த காரியம்.. போலீசில் கதறிய வாலிபர்.!

உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

இதையும் படிங்க:-  உல்லாசத்துக்கு தடையாக இருந்த கணவர்.. கூலிப்படையை வைத்து போட்டு தள்ள முயன்ற மனைவி.. திடுக்கிடும் தகவல்..!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காசிதர்மம் புதுமனை தெரு பகுதியை சேர்ந்த குமாருக்கும், அப்பகுதியை சேர்ந்த தனலட்சுமிக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுதன் (9), கவுதம் (7 )என்ற 2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில், தனலட்சுமிக்கும், அப்பகுதியை சேர்ந்த காட்டுராஜா (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் நாளடைவில் கணவர் குமாருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் சமாதானம் செய்ததையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கள்ளக்காதல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த கணவர் அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!