கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தூங்கிக்கொண்டிருந்த காதல் கணவரை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காமவெறி பிடித்த மனைவி.!

Published : Jul 27, 2021, 01:47 PM ISTUpdated : Jul 27, 2021, 01:51 PM IST
கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. தூங்கிக்கொண்டிருந்த காதல் கணவரை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காமவெறி பிடித்த மனைவி.!

சுருக்கம்

சேதுராஜாராம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் கழுத்தை அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் சேதுராஜாராம் அலறி துடித்ததால் அக்கம் பக்கத்தினர் எழுந்து சவுந்தர்யா வீட்டுக்கு ஓடி வந்தனர். 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மனைவி சவுந்தர்யா, கள்ளக்காதலன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அருகே உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங் (29). இவரது மனைவி சவுந்தர்யா (25). இவர்கள் 2 பேரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம்  செய்து கொண்டனர். சவுந்தர்யா கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்,  கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குணசேகரன் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவி சவுந்தர்யாவை கண்டித்துள்ளார். ஆனாலும், இவ்வளவு சொல்லியும் கள்ளக்காதல் தொடர்ந்தது. 

இதனால்,  தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பின்னர், கணவர் கொடுமை செய்வதாக மனைவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், கணவன்-மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகும் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இனிமேல் பொறுத்திருந்தது போதும் என்று என்னிய மனைவி கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டினாள். 

நேற்று முன்தினம் இரவு சேதுராஜாராம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிவாளால் கழுத்தை அறுத்துள்ளார். வலி தாங்க முடியாமல் சேதுராஜாராம் அலறி துடித்ததால் அக்கம் பக்கத்தினர் எழுந்து சவுந்தர்யா வீட்டுக்கு ஓடி வந்தனர். அப்போது, சேதுராஜாராம் சிங், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால், அக்கம் பக்கத்தினரிடம் தனது கணவர் கீழே விழுந்து காயமடைந்து விட்டதாக கூறியுள்ளார். 

இதனையடுத்து, சேதுராஜாராம் சிங்கை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவர்களிடம் சேதுராஜாராம் கூறுகையில் தன்னை மனைவி சவுந்தர்யாவும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கொல்ல முயன்றதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சவுந்தர்யா மற்றும் கள்ளக்காதலன், அவர்களது கூட்டாளிகளான 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு