ஒரே நேரத்தில் 2 பேருடன் திருமணமான பெண் கள்ளக்காதல்.. உல்லாசம்... இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்..!

By vinoth kumarFirst Published Jul 8, 2021, 3:30 PM IST
Highlights

இதனை பயன்படுத்திய ராமு, மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில், மணியின் நண்பர், தினேஷுக்கும், மகாலட்சுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. ராமுவும், தினேஷும் மற்றவர்களுக்கு  தெரியாமல் அடிக்கடி மகாலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ராமு என்ற வாலிபர் கொடூர குத்திக்கொலை செய்யப்பட்டு பாழடைந்த கிணற்றில் சடலத்தை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை ஊராட்சி, முருகாத்தம்மன்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராமு (33). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மனைவி ரேணுகா (31). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 4ம் தேதி ராமு, வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, குடும்பத்தினர் மணிமங்கலம் காவல் நிலையத்தல் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இதனிடையே, காவல்கழனி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கிணற்றில் சடலமாக இருப்பது ராமு என்று தெரியவந்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் பேரில் தினேஷ், அவரது நண்பர்கள் வினோத் (20), பிரபாகரன் (22), சாலமங்கலம் பூவேந்திரன் (19), நரியம்பாக்கம் ஆகாஷ் (19), வெங்கம்பாக்கம் சின்னராசு (19) ஆகியோரை பிடித்து, விசாரித்தனர். இந்த விசாரணையில் படு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதில், நரியம்பாக்கத்தை சேர்ந்தவர் மணி (39). இவரது மனைவி மகாலட்சுமி (35). கடந்த 8 ஆண்டுகளாக ராமு, மகாலட்சுமியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கணவன், மனைவி இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இதனை பயன்படுத்திய ராமு, மகாலட்சுமி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே நேரத்தில், மணியின் நண்பர், தினேஷுக்கும், மகாலட்சுமியுடன் தொடர்பு ஏற்பட்டது. ராமுவும், தினேஷும் மற்றவர்களுக்கு  தெரியாமல் அடிக்கடி மகாலட்சுமியுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மணி, மனைவி மகாலட்சுமியுடன் சமரசம் பேசி, மீண்டும் குடும்பம் நடத்த தொடங்கினர். இதனால் ராமுவும், தினேஷும் மகாலட்சுமியுடன் உல்லாசமாக இருக்க முடியாமல் தவித்தனர். அப்போது தினேஷ், மகலாட்சுமியுடன் ராமு மீண்டும் தொடர்பு வைத்து, அடிக்கடி அவர்கள் சந்திப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமு, மணியை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதையடுத்து தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை சேர்ந்து ராமுவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மணி, மகாலட்சுமி,  தினேஷ் உள்பட 8 பேரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

click me!