எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

Published : Aug 12, 2022, 08:23 AM IST
எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

சுருக்கம்

இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடுமாறு கணவர் பலமுறை எச்சரித்து வந்துள்ளார். ஆனால், நீலம்மா இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். 

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஆலமடுகுஹரிஜனவாடா கிராமத்தை சேர்ந்தவர் சோக்கையா. இவரது மனைவி நீலம்மா தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீலம்மாவுக்கு அதே பகுதியை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுதத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடுமாறு கணவர் பலமுறை எச்சரித்து வந்துள்ளார். ஆனால், நீலம்மா இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- என்ன நிர்வாணமா நிக்க வச்சு நகை போட்டு அழகு பாப்பாரு.. சேகர் சேட்டை குறித்து சுவாதி அதிர்ச்சி தகவல்.!

இதனால், தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. உறவினர்கள் சமாதானம்  செய்துள்ளனர். ஆனால், நீலம்மா கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கள்ளத்தொடர்பு காரணமாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரிடையே நீண்ட நேரம் சண்டை நடந்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சோக்கையா வீட்டில் இருந்த  கத்தியை எடுத்து மனைவி நீலம்மாவை மார்பு, கை, கழுத்து என பல்வேறு  இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

இதையும் படிங்க;- ஓடும் ஆட்டோவில் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நொடியே கீழே குதித்த சிறுமி.. கானா பாடகர் கைது.!

இதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நீலம்மாவை அவரதுது உறவினர்கள் மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீலம்மால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்ழு விரைந்த போலீசார் நீலம்மால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுபஙபு வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கணவர் சோக்கையாவை தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!