உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை! ஆத்திரத்தில் 4வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாய் என்ன செய்தார் தெரியுமா?

By vinoth kumarFirst Published May 9, 2023, 11:32 AM IST
Highlights

கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் ஒரு வயது பெண் குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற கொடூர தாய் மற்றும் 4வது கள்ளக்காதலன் அததிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லேஷ்(32). இவர், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார். அதே சூளையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், புதுவடவள்ளியை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி கலைவாணி(27), ஒரு வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை செய்தனர்.

இந்நிலையில், கலைவாணியுடன் மல்லேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு கைக்குழந்தையுடன் கலைவாணி மல்லேசுடன் யாருக்கும் தேரியாமல் வெளியேறினார். பின்னர், ஓமலூர் அருகே உள்ள செங்கல் சூளையில், கணவன் -மனைவி எனக்கூறி வேலை பார்த்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு இருவரும் சேர்ந்து மது குடித்து விட்டு, உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, குழந்தை அழுதுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த  இருவரும் குழந்தையை தூக்கி சுவற்றில் தூக்கி அடித்துள்ளனர். இதில், காயமடைந்த குழந்தை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த  ஏற்கனவே குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். குழந்தையின் தலையில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்து போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் போதையில் இருந்த போது குழந்தை அழுததால் சுவற்றில் தூக்கி அடித்து கொலை செய்தது தெதரியவந்தது. கலைவாணிக்கு ஏற்கனவே 3 கணவர்கள் இருந்ததும், அவர்களை பிரிந்து வந்து, 4வதாக மல்லேஷூடன் குடும்பம் நடத்தியதும் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

click me!