பல ஆண்களுடன் கள்ளத்தொடர்பு.. உல்லாசம்.. எந்நேரமும் செல்போன் கடலை.. கிரைண்டர்கல்லை போட்டு மகளை கொலை செய்த தாய்

By vinoth kumarFirst Published Jul 13, 2021, 2:03 PM IST
Highlights

 13 வயதில் மகள் இருக்கின்ற நிலையில் கண்டவர்களுடன் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? என்று தட்டிக்கேட்ட தாயை நதியா தர்ம அடி கொடுத்துவிட்டு விரட்டியுள்ளார். தனது சகோதரி வீட்டில் தஞ்சம் அடைந்த நாகமணி தனது மகள் நதியாவுக்கு தக்க பாடம் கற்பிக்கும் திட்டத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்து மகளுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார். 

கணவர் உயிரிழந்த நிலையில் எந்த நேரமும் ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மகளின் தலையில் அம்மி கல்லைபோட்டு தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி (47 ). கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு  நதியா (31 ) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு பிரியதர்ஷினி(13) என்ற மகளும், நிதீஷ் குமார்(12) என்ற மகனும் உள்ளனர். 

இந்நிலையில், சரவணகுமார் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். கணவர் இறந்த சில மாதங்களிலேயே நதியா வேறு வேறு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு எந்த நேரமும் செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இதனைக் கண்ட அவரது மாமியார் மருமகளை வீட்டை விட்டு விரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், தாய் வீட்டுக்கு வந்த நதியா தனிமையை தனக்கு சாதமாக்கிக் கொண்டு இரவு முழுவதும் மணிக்கணக்கில் பேசுவதும், ஆண் நண்பர்களுடன் வெளியில் சென்று வந்துள்ளார்.

அந்த நண்பர்கள் மது அருந்துவது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கமும் நதியாவுக்கு தொற்றிக்கொண்டுள்ளது. இதன்காரணமாக நதியாவிற்கும், அவருடைய தாய் நாகமணிக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், 13 வயதில் மகள் இருக்கின்ற நிலையில் கண்டவர்களுடன் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? என்று தட்டிக்கேட்ட தாயை நதியா தர்ம அடி கொடுத்துவிட்டு விரட்டியுள்ளார். தனது சகோதரி வீட்டில் தஞ்சம் அடைந்த நாகமணி தனது மகள் நதியாவுக்கு தக்க பாடம் கற்பிக்கும் திட்டத்துடன் மீண்டும் வீட்டுக்கு வந்து மகளுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார். 

இந்நிலையில், நேற்றிரவும் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும், நீ ஏன் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் இருவரும் படுத்துள்ளனர். இந்நிலையில், ஆத்திரம் அடங்காத நாகமணி அதிகாலை  தூங்கிக் கொண்டிருந்த தனது மகளின் தலையில் மாவு ஆட்டுக்கல் மூலம் பின்னந்தலையில்  தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். 

இதனையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தாய் நாகமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் பெற்ற தாயே தனது மகள் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!