நல்லவன்னு நம்பி ஆடைகளை அவிழ்த்து வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற குடும்ப பெண்.. இறுதியில் நடந்த பயங்கரம்.!

By vinoth kumarFirst Published May 14, 2022, 3:15 PM IST
Highlights

இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் எல்லை மீறியது. காதலன் யாஸ்மா குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு வீடியோ காலில் நிர்வாணமாக நின்றிருக்கிறார்.  இதை அப்படியே யாஸ்மாகுமார் ரெக்கார்டு செய்துள்ளார்.  அடுத்த சில நாட்களில், நீயும் வேண்டும், உன்னுடைய சொத்தும் வேண்டும். இல்லையென்றால் வீடியோ வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். 

திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் உன்னுடைய அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டிய முகநூல் நண்பரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத் பிரஷாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி(32). இவர் திருமணமானவர். இவருக்கு முகநூல் பக்கத்தில் புகைப்படக் கலைஞரான யாஸ்மா குமார் என்ற வாலிபர் அறிமுகமாகி இருக்கிறார்.  யாஸ்மா குமாரும், ஸ்வேதா ரெட்டியும் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து முகநூலில் மூலமாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளனர்.

இவர்களது பழக்கம் நாளுக்கு நாள் எல்லை மீறியது. காதலன் யாஸ்மா குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் ஆடைகளை அவிழ்த்து போட்டுவிட்டு வீடியோ காலில் நிர்வாணமாக நின்றிருக்கிறார்.  இதை அப்படியே யாஸ்மாகுமார் ரெக்கார்டு செய்துள்ளார்.  அடுத்த சில நாட்களில், நீயும் வேண்டும், உன்னுடைய சொத்தும் வேண்டும். இல்லையென்றால் வீடியோ வெளியிடுவேன் என மிரட்டி வந்துள்ளார். 

இதனால், என்ன செய்வது தெரியாமல் அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா யாஸ்மா குமாரை கொலை செய்ய திட்டமிட்டார். இதையடுத்து மற்றொரு முகநூல் நண்பரும் ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வருமான அசோக்கிடம் சொல்லி ஸ்வேதா புலம்பியுள்ளார். இதனையடுத்து, அசோக் தனது நண்பவர்களுடன் ஸ்வேதாவின் வீட்டிற்கு கடந்த 4ம் தேதி சென்றுள்ளார். திட்டமிட்டபடி, யாஸ்மாகுமாருக்கு போன் செய்து வீட்டிற்கு  ஸ்வேதா வரவழைத்துள்ளார். சுத்தியலால் யாஸ்மாகுமாரின் தலையில் அடித்து கொலை செய்து அருகில் உள்ள சாலையில் சடலத்தை வீசியது தெரியவந்தது. 

click me!