மனைவியை தம்பிகளுடன் உல்லாசத்தில் ஈடுபடுத்திய அண்ணன்..!! பல்லில்லாத அண்ணன், பக்கோடா சாப்பிட்ட தம்பிகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2019, 4:38 PM IST
Highlights

தனது சகோதரர்களை தன்னுடன் பாலியல் உறவு ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி  அதன் மூலம் எனக்கு  ஒரு பெண் குழந்தை உள்ளது . இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு  அவரது சகோதரர்கள் அடிக்கடி என்னை  பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் .  

தனக்கு ஆண்மை இல்லாததால் காரணத்தால் கணவன்  மனைவியை தன் சகோதரர்களுக்கு  விருந்தாக்கி வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பல ஆண்டுகளாக வீட்டிலேயே அடைக்கப்பட்டு பாலியல்  சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்தள்ளது.  எப்படியோ அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்து தப்பி வந்த அந்தப் பெண் ஜெய்ப்பூர் பங்க்ரோடா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  அதில் தெரிவித்துள்ள அவர் ,  தனக்கு திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது திருமணமான முதல் இரவன்று  தனது கணவருக்கு ஆண்மை குறைபாடு இருப்பது தெரியவந்தது , அப்போது அவர் இதற்காக சிகிச்சை எடுத்து  வருவதாகவும் விரைவில் குணமாகிவிடும் என்றும் கூறி  என என்னை சமாதானப்படுத்தினார். 

ஆனால் நாளடைவில் அவரால் என்னுடன் சரியாக உறவை வைத்துக் கொள்ள முடியவில்லை ,  தனக்குள்ள பிரச்சனையை வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும்  என்ற அச்சத்தால் என்னை  வீட்டுக்குள்ளேயே வைத்து அடைத்த என் கணவர் இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று என்னை  மிரட்டிவந்தார். இந்நிலையில்   தனது சகோதரர்களை தன்னுடன் பாலியல் உறவு ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி  அதன் மூலம் எனக்கு  ஒரு பெண் குழந்தை உள்ளது . இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு  அவரது சகோதரர்கள் அடிக்கடி என்னை  பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகின்றனர் .  இது குறித்து கணவரிடம்  எடுத்துக் கூறினாலும் அவர் இவற்றை  கண்டு கொள்வதே இல்லை .  ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல்,  விட்டின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டிலிருந்து தப்பி வந்ததாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். 

இத்தனை ஆண்டுகளாக  என்னை பாலியல் பலாத்காரம் செய்த என  கணவரின் சகோதரர்கள், மற்றும்  என்னை  வீட்டுச் சிறையில் வைத்து சித்தரவதை செய்த என் கணவன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் அவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவே எனக்கும் என் மகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அந்த பெண் கேட்டுக்கொண்டுள்ளார்.  இது குறித்து  தகவல் தெரிவித்துள்ள போலீசார்,  இது நீண்ட நாள் வழக்கு என்பதால் புகார் குறித்து  விசாரித்து வருகிறோம் ,  இதுவரை இந்த வழக்கில் யாரும்  கைது செய்யப்படவில்லை ,  இதுவரையில் யாருக்கும்  மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவில்லை  வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது என தெரிவித்துள்ளனர். 

click me!