34 வயசு ஆச்சு ஒரு ஆம்பளைகூட என்ன தொடல...!! உல்லாசத்துக்கு வலை விரித்த ஊராட்சி மன்றத் தலைவி..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 16, 2019, 3:55 PM IST
Highlights

34 வயது ஆகிறது இதுவரை  எந்த ஆணும் என்னை தொடவில்லை உங்களிடம் உல்லாசமாக இருக்க விரும்புகிறேன் என பாலசந்தரிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல்  உணர்வை தூண்டியுள்ளார் மயூரா.

திருமணமான பெண் ஒருவர் பணத்திற்காக பலரை ஏமாற்றி உல்லாசமாக இருந்து அவர்களை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அந்தப் பெண்ணின் வலையில் காவல்துறை எஸ்ஐ தொழிலதிபர் எனப் பலர் பணத்தை இழந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  சென்னை பள்ளிக்கரணை மனோகர் நகரை சேர்ந்தவர் பாலச்சந்தர் (46) சென்னை வடபழனி மற்றும் மும்பை ,  துபாய் உள்ளிட்ட இடங்களில் நிறுவனம் நடத்தி வருகிறார் .  இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்  மனைவி இறந்துவிட்டதால் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள முடியாமல் பிள்ளைகளை மாமியார் வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் பாலச்சந்திரனின் சென்னை வடபழனி அலுவலகத்தில் மயூரா வர்ஷினி  என்ற பெண் வேலைக்கு சேர்ந்துள்ளார் தனக்கு சொந்த ஊர் பெங்களூர்  என்றும் தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல உள்ளதால் இங்கு பயிற்சி எடுக்க வேலைக்கு வந்து இருக்கிறேன் என பாலசந்தரிடம் கூறியுள்ளார்.  இதை நம்பிய பாலச்சந்திரன் அந்தப் பெண்ணிடம் நன்கு பழகி வந்துள்ளார் .  பாலச்சந்தருக்கு மனைவி இல்லாததை தெரிந்துகொண்ட மயூரவர்ஷினி பாலசந்தரிடம் அன்பாகப் பேசி தனக்கு 34 வயது ஆகிறது இதுவரை  எந்த ஆணும் என்னை தொடவில்லை உங்களிடம் உல்லாசமாக இருக்க விரும்புகிறேன் என பாலசந்தரிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல்  உணர்வை தூண்டியுள்ளார் மயூரா.  மனைவியை இழந்து தனிமையில் இருந்த பாலச்சந்தரும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் 

இருவரும் நெருக்கமாக பழகினார்,  அடிக்கடி பலஇடங்களுக்கு சென்று  உடலுறவு வைத்துக் கொண்டனர் .  பாலசந்தரிடம் நகை பணம் உள்ளிட்டவைகளை சுருட்ட  ஆரம்பித்தார் மயிரா,  பிறகு அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மயிரா விலக தொடங்கினார்.   இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருந்த நிலையில் மயிராவின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட ஆரம்பித்தது,  இதனால்  மயுராவை  பின் தொடர்ந்து அவரை கண்காணித்தார் பாலச்சந்தர் . அதில் அவரைப் பற்றிய உண்மைகள்  தெரியவந்தது .  செந்தாமரை என்கின்ற மயுராவின்  சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் காளிங்கராயன் பாளையம் என்பதும்  அவருக்கு 44 வயது என்பதும், சதாசிவம்  என்பவருடன் அவருக்கு  ஏற்கனவே திருமணமாகி  ஒரு மகன் , ஒரு மகள் உள்ள நிலையில் சொந்த ஊரில் திமுக பஞ்சாயத்து தலைவியாக இருந்தவர் என்பதும் தெரியவந்தது. 

இடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு துபாயில் வேலை பார்த்த ராஜதுரை என்பவருடன் நெருங்கி பழகி அவரிடமும் பணம் நகைகளை சுருட்டிக்கொண்டு,  பின்னர் புளியந்தோப்பு  காவல் நிலைய எஸ் ஐயாக இருந்த  சந்தோஷ்குமாரை  மயக்கி  தனது வலையில் வீழ்த்திய மயூரா அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய்களை  சுருட்டிக்கொண்டு  டிமிக்கி கொடுத்தவர் என்பதும் தெரியவந்தது . இந்நிலையில் பாலச்சந்தர்,  தன்னிடம் இருந்து பெற்ற பணம் நகைகளை  திருப்பி கேட்க ,  பணத்தை தர முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்.  தன்னுடன் உல்லாசமாக இருந்ததற்கும் நீ கொடுத்த பணத்திற்கும் சரியாகி விட்டது எனக் கூறி மிரட்டியுள்ளார் மயூரா,  இதனால் பாலச்சந்தர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செந்தாமரை என்ற மயூரா மீது புகார் கொடுத்துள்ளார் .

click me!