ஆசையாக நெருங்கும் போதெல்லாம் ஃபுல் மப்பில் தூங்கிய கணவர்.. ஏக்கத்தில் இருந்த மனைவி செய்த பகீர் சம்பவம்..!

By vinoth kumarFirst Published Jul 7, 2022, 11:58 AM IST
Highlights

கணவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. மேலும் விஜயாவின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் வேறு ஒரு நபருடன் தொடர்பில் அவர் இருந்ததும் தெரியவந்தது.

குடிபோதையில் டார்ச்சர் செய்து வந்த கணவனை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம், வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குமார்(50), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(40), வீட்டு வேலை செய்து வந்தார். இவர்களது இரண்டு குழந்தைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- இன்டர்ன்ஷிப் வந்த மாணவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்து கதற கதற பலாத்காரம்..IAS அதிகாரியை அலேக்கா தூக்கிய போலீஸ்

 

இந்நிலையில், கடந்த 3ம் தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக அவரது மனைவி விஜயா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனையில் குமார், கழுத்து நெரிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது.  இதனையடுத்து, போலீசார் விஜயாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். 

போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் கணவரை கொலை செய்ததை விஜயா ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்;- குமாரும் விஜயாவும் கலப்பு திருமணம் செய்தவர்கள். குமார், எலெக்ட்ரீசியனாக வேலைப்பார்த்து வந்தார். விஜயா வீட்டு வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உடைய குமார் தினமும் குடித்துவிட்டு மனைவி விஜயாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் வந்த குமார் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயா கணவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதில் குமார் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது தெரியவந்தது.

இதையும் படிங்க;-  முதல் இரவுக்கு சென்ற புதுமணப்பெண்.. மிருகத்தனமாக நடந்து கொண்டதால் கம்பி எண்ணும் கணவர்..!

மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்க கணவர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது. மேலும் விஜயாவின் செல்போனை பறிமுதல் செய்து பார்த்தபோது அதில் வேறு ஒரு நபருடன் தொடர்பில் அவர் இருந்ததும் தெரியவந்தது. எனவே இந்த கொலை சம்பவத்தில் அந்த நபருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!