தாலி கட்டிய கணவரை ஆத்திரத்தில் போட்டு தள்ளிய மனைவி! அதிர வைக்கும் காரணம்..!

Published : May 02, 2023, 03:04 PM ISTUpdated : May 02, 2023, 03:05 PM IST
தாலி கட்டிய கணவரை ஆத்திரத்தில் போட்டு தள்ளிய மனைவி! அதிர வைக்கும் காரணம்..!

சுருக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த  உப்புத்துறை மாளிகைப்பாறை மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (40). இவரது மனைவி ஜெயா (35). இவர்களின் மகள், மகன் ஆகியோர் மதுரையில் உள்ள விடுதியில் தங்கி  வருகின்றனர். பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் இவர்களும் வீட்டில் இருந்தனர். 

குடிபோதையில் தகராறு செய்து அடித்து கொடுமைப்படுத்திய கணவரை ஆத்திரத்தில் மனைவி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த  உப்புத்துறை மாளிகைப்பாறை மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (40). இவரது மனைவி ஜெயா (35). இவர்களின் மகள், மகன் ஆகியோர் மதுரையில் உள்ள விடுதியில் தங்கி  வருகின்றனர். பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் இவர்களும் வீட்டில் இருந்தனர். குடிப்பழகத்திற்கு ஆளான ராஜா அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். 

இதையும் படிங்க;- சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

இந்நிலையில், நேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயா அரிவாளை எடுத்து கணவரின் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.  பின்னர் அவரே கணவரை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், அவர் வழியிலேயே இறந்துவிட்டதால் மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்தார். 

இதையும் படிங்க;- சிக்னலே காட்டாமல் வலது பக்கமாக திரும்பி பிரேக் போட்ட நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கர விபத்து.!

இந்நிலையில், தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ராஜாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி