பெத்த மகள்களிடம் சில்மிஷம் செய்த தந்தை... பலியான மகள்... அடுத்து நிகழ்ந்தது என்ன?

By Narendran SFirst Published Sep 20, 2022, 7:37 PM IST
Highlights

உத்தரபிரதேசத்தில் தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததால் விரக்தியடைந்த இரண்டு சகோதரிகள் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததால் விரக்தியடைந்த இரண்டு சகோதரிகள் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் மல்கான் சிங் என்பவர் தனது மனைவி ரேகா தேவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் தனது சொந்த மகள்களுக்கு மல்கான் சிங் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: கணவனை கழற்றிவிட்டு கல்லூரி தோழனுடன் உல்லாசம்.. மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அசிங்கம் செய்த மருமகள்..

இதனால் விரக்தியடைந்த சகோதரிகள் விஷம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அடுத்து சிறுமிகளின் தாய் ரேகா தேவி தனது கணவர் மல்கான் சிங், மைத்துனர் சுரேஷ் மற்றும் ராஜேஷ் மீது புகார் அளித்தார்.

இதையும் படிங்க: 3 முறை போலீஸ் வந்தும் திருந்தாத மாணவர்கள்.. போதையின் பிடியில் சிக்கிய மாணவர்கள் - கதறும் பெற்றோர்கள் !

அதைத் தொடர்ந்து அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, தந்தை மல்கான் சிங் கைது செய்யப்பட்டார். 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மல்கான் சிங் ஆறு மாதங்களுக்கு முன்பு பரோலில் வீட்டிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!