சிகிச்சைக்கு பதிலாக கூட்டு பாலியல் வன்கொடுமை - உபி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ..

Published : Aug 26, 2019, 01:20 PM ISTUpdated : Aug 26, 2019, 01:22 PM IST
சிகிச்சைக்கு பதிலாக கூட்டு பாலியல் வன்கொடுமை  - உபி அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ..

சுருக்கம்

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவருக்கு அங்கிருக்கும் ஊழியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .  

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ரஸாவை சேர்ந்தவர் 17 வயதான இளம்பெண்  ரேகா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அங்கிருக்கும் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் . அவருக்கு துணையாக அவரின் தாயார் இருந்து கவனித்து வந்திருக்கிறார் .

சம்பவத்தன்று இரவு ரேகாவின் தாயார் தூங்கி விட்டார் . இரவு 10 மணியளவில் வந்த வார்டு பாய் சிவானந்தன் ஊசி போட வேண்டும் என்று கூறி ரேகாவை கீழே இருக்கும் அறைக்கு அழைத்துள்ளார் . அம்மாவை எழுப்பி கூட்டி வருகிறேன் என்று கூறிய ரேகாவிடம் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியிருக்கிறார் சிவானந்தன் .

இதையடுத்து கீழே சென்ற ரேகாவிற்கு மாத்திரை ஒன்றை கொடுத்து இருக்கிறார் வார்டு பாய் சிவானந்தன் . அதை சாப்பிட்டதும் ரேகா மயக்கமடைந்திருக்கிறார் . இதன்பிறகு சிவனந்தனும் மருத்துவமனையில் வேலை பார்க்கும் விஷால் என்பவரும் சேர்ந்து ரேகாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர் .

மயக்கம் தெளிந்த ரேகா தனக்கு நேர்ந்த கொடுமையை தாயிடம் கூறி அழுதிருக்கிறார் . உடனே சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது காவல் துறையிடம் புகார் அளித்தார் ரேகாவின் தாயார் . புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை மருத்துவமனை ஊழியர்கள் இரண்டுபேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது .

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு