என்ன விட்டுடுங்க.. ஒன்னும் பண்ணிராதீங்க.. அலறிய மாணவியை கதறவிட்ட 4 பள்ளி மாணவர்கள்.. சென்னையில் பயங்கரம்.!

By vinoth kumarFirst Published May 12, 2022, 3:10 PM IST
Highlights

4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, கதவை பூட்டிக்கொண்டு 4 பேரும் சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சென்னையில் 8-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து கட்டிப்போட்டு 4 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளுக்கு 15 வயதும், 2வது மகளுக்கு 13 வயதும், 3-வது மகளுக்கு 11 வயதும் ஆகிறது. இவர்களின் தாய் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 2-வது மகளான 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்கு சென்று படிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததனர். 

இந்நிலையில், 4 மாணவர்களும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து, கதவை பூட்டிக்கொண்டு 4 பேரும் சேர்ந்து மாணவியின் ஆடைகளை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்துதுவிடுவதாக மிரட்டிவிட்டு சென்றனர். பயத்தில் இதுதொடர்பாக யாரிடமும் சொல்லாமல் இருந்ததால் மனஉளைச்சல் ஏற்பட்டது. 

இதுதொடர்பாக தாயிடம் கதறியபடி மகள் கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கைது செய்தனர். பின்னர், நீதததிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

click me!