காதலனை தாக்கி கல்லூரி மாணவியை காட்டுக்குள் வைத்து கதற கதற கற்பழித்த ரவுடி கும்பல்!! திருச்சியில் திக் திக் சம்பவம்

By sathish kFirst Published Aug 6, 2019, 11:08 AM IST
Highlights

தனியே நின்ற காதலன் தாக்கப்பட்டு அவரது காதலி கதற கதற கற்பழிக்கப்பட்ட சம்பவம்  திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

தனியே நின்ற காதலன் தாக்கப்பட்டு அவரது காதலி கதற கதற கற்பழிக்கப்பட்ட சம்பவம்  திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

திருச்சி அருகே துவாக்குடியில் என்ஐடி பொறியியல் கல்லூரி உள்ளது. அங்கு கல்லூரியில் வெளிமாநில மாணவ- மாணவிகள் அதிகமாக படித்து வருகிறார்கள். அவர்கள் அதே கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு படித்து வருகிறார்கள். இதில், தங்கி மும்பையை சேர்ந்த தகீரா என்ற மாணவி என்ஜினீரியங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி தகீரா தன்னுடன் படிக்கும் மாணவர் ஷாஜுவை காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது காதலன் ஷாஜுவுடன் வெளியில் சுற்றி விட்டு வருவது வழக்கம். கடந்த வெள்ளிக் கிழமை தனது காதலன் ஷாஜுவுடன் வெளியே சென்ற தகீரா ஞாயிற்றுகிழமை காலை 3 மணி அளவில் கல்லூரி விடுதிக்கு திரும்பினார்.

தகீரா வந்தது அதிகாலை நேரம் என்பதால் இருந்ததால் ஹாஸ்டல் கேட் பூட்டப்பட்டிருந்தது. இதனால் தகீராவும், காதலனும் கல்லூரி எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் சிறிது சரக்கு போதையில் இருந்துள்ளனர்.

அங்கு 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இருட்டில் தனியாக நின்ற தகீரா மற்றும் காதலனிடம் அவர்கள் தங்களை போலீஸ் என்று சொல்லி விசாரிப்பதை போல இங்கு ஏன் இந்த நேரத்தில் நிற்கிறீர்கள்? என கேட்டனர். பிறகு தகீராவை மட்டும் ஹாஸ்டலில் அழைத்துக்கொண்டுவிடுவதாக கூறி பைக்கில் ஏறும்படி கூறியுள்ளனர்.

இதற்கு தகீராவின் காதலன் எதிர்ப்பு தெரிவித்தார். போதையில் இருந்த அவரை 3 பேரும் அடித்து விட்டு தாக்கி விட்டு தாகீராவை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி சென்றனர். துவாக்குடி ரோட்டில் கல்லூரி அருகில் காட்டு பகுதி உள்ளது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு மணிகண்டன் தகீராவை கதற, கதற கற்பழித்துள்ளார்.

அதன்பிறகு அவரது நண்பர்களும் தகீரா கற்பழிக்க முயன்றுள்ளனர். அப்போது தாகீரா பயங்கரமாக அலறி துடித்ததால் பயந்து போன அந்த 3 பேரும் யாராவது வந்து விடுவார்கள் என்ற பீதியில் அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு தப்பி விட்டனர். அதன்பிறகு அந்த மாணவி காட்டு பகுதியில் இருந்து பீதி கலந்த முகத்துடன் ரோட்டு பகுதிக்கு வந்தார். நடந்த சம்பவத்தை தோழிகளிடம் அழுதுகொண்டே கூறினார்.

தகீராவின் பெற்றோர் மும்பையை சேர்ந்தவர்கள், இவரது தந்தை சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உயர் அதிகாரியாக வேலை செய்கிறார். அவர் தற்போது கல்பாக்கத்தில் வசித்து வருகிறார்கள். நடந்த சம்பவம் குறித்து அவரது அப்பாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்தனர்.

சம்பவம் குறித்து அவர்கள் துவாக்குடி போலீசில் புகார் அளித்தனர். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு , கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினர்.அப்போது அப்பகுதியில் உள்ள சிசிடிவி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். இதில் 3 வாலிபர்களின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஒருவன் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.  

மேலும், அவரது 2 நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மாணவி தாகீரா மற்றும் காயம் அடைந்த அவரது காதலன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கைதான மணிகண்டன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. திருடச் சென்ற போது இளம் காதல் ஜோடி சிக்கி கொண்டதால் கடத்தி சென்று கற்பழிக்க அவர் முயன்றுள்ளனர்.

click me!