திமுக முன்னாள் எம்.பி. மஸ்தானை தம்பியே ஸ்கெட்ச் போட்டு கொன்றது அம்பலம்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!

By vinoth kumarFirst Published Jan 13, 2023, 10:05 AM IST
Highlights

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான்(66). 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவருக்கு கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது.

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரது சகோதரர் ஆதம் பாஷா கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் டாக்டர் மஸ்தான்(66). 1995 முதல் 2001 வரை அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இதனைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவருக்கு கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவில் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க;- முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், மகள் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐடிசி சோழா ஓட்டலில் நடக்க இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 22ம் கூடுவாஞ்சேரி அருகே காரில் வந்து கொண்டிருந்த நெஞ்சுவலி மற்றும் வலிப்பு ஏற்பட்டதை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஸ்தான் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறியதை அடுத்து சந்தேகம் மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.  விசாரணையில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்தால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக கார் ஓட்டுநர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்து போலீஸ் நடத்திய விசாரணையில், சகோதரருக்கு கொடர்பு இருப்பது அம்பலமானது. இதனையடுத்து, அவரது சகோதரர் ஆதம் பாஷாவும் கைது செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் ரூபாய் கடனை திரும்ப கேட்டதால் நண்பர்கள் உதவியுடன் அண்ணனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க;-  ஆயிரக்கணக்கான ஆட்டை ஆட்டையை போட்டு கறிக்கடைக்காரருடன் உல்லாசம்.. 3 பேர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்.!

click me!