ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்! வீடியோ எடுத்து மிரட்டி சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற வாத்தியார்

By vinoth kumarFirst Published Jan 12, 2023, 2:47 PM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் வசித்து வரும் தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர், பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலை நேரத்தில் அதே பகுதியில் பாட்டு வாத்தியாரிடம் பாட்டு கற்று வந்துள்ளார். 

 சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற பாட்டு வாத்தியார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் வசித்து வரும் தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர், பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். மாலை நேரத்தில் அதே பகுதியில் பாட்டு வாத்தியாரிடம் பாட்டு கற்று வந்துள்ளார். அப்போது அவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதையும் படிங்க;- சென்னையில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்! அரைகுறை ஆடைகளில் 2 இளம்பெண்கள்.. ஒரு மணிநேரத்திற்கு எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், அந்த சிறுமிக்கு தெரியாமல் ஆபாச போட்டோ மற்றும் வீடியோக்களை பாட்டு வாத்தியார் எடுத்துள்ளார். இதனையடுத்து, தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்க வேண்டும். இல்லையென்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால், பயந்து போன சிறுமி பாட்டு வகுப்பு செல்லாமல் தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும், பாட்டு வாத்தியார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். 

இதனால், வேறு வழியில் இல்லாமல் சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து  பாட்டு வாத்தியாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;-  முனகல் சத்தம்.. அரை நிர்வாணத்தில் அண்ணியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கொழுந்தன் என்ன செய்தார் தெரியுமா?

click me!