Latest Videos

அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்! பதற்றம்! போலீஸ் குவிப்பு!

By vinoth kumarFirst Published Jun 30, 2024, 9:42 AM IST
Highlights

புஷ்பநாதன் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் புது வண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். 

கடலூரில் அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

கடலூர் முதுநகர் அருகே உள்ள வண்டிபாளையம் ஆலை காலனியை புஷ்பநாதன் (45). அதிமுக மாவட்ட பிரதிநிதியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் புஷ்பநாதன் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் புது வண்டி பாளையம் சூரசம்ஹாரத் தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த புஷ்பநாதன் இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 

இதையும் படிங்க: சார் ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! கதறிய மாணவி விடாமல் பாலியல் தொல்லை! நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியைக்கு ஆப்பு!

இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் புஷ்பநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து புஷ்பநாதனின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைய முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உறவினர்கள் கூறும் போது புஷ்பநாதனை கொலை செய்தவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை கேட்ட போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தனர். இதை ஏற்ற புஷ்பநாதனின் உறவினர்கள் சாலை மறியலில் கைவிட்டு சென்றனர். 

இதையும் படிங்க:  வேலைக்கு வந்த சித்தாளை கரெக்ட் செய்து உல்லாசம்.. கழற்றிவிட நினைத்ததால் ஆத்திரத்தில் மேஸ்திரி செய்த காரியம்!

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அந்த தொழில் போட்டி காரணமாக அவரை யாரேனும் கொலை செய்தார்களா அல்லது முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!