அட சீ கருமம் கருமம்.. பெற்ற மகளை மிரட்டி ஒரு வருடமா பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை..!

By vinoth kumarFirst Published Oct 18, 2021, 7:35 PM IST
Highlights

முகமது பாரூக் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்தார். எனவே, இருவரையும் தனது அரவணைப்பில் தந்தையான பாரூக் வளர்த்து வந்தார். மேலும், பாரூக் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பாரூக்கின் 15 வயது மகள் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அதில், கடந்த ஒரு வருடமாக எனது தந்தை தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். 

பெற்ற மகளை தந்தை ஒரு வருடமாக பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து, தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம் பாக்கத்தை சேர்ந்தவர் முகமது பாரூக்(42). இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2019ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு 15 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அபப்கதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். 

இந்நிலையில், முகமது பாரூக் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்தார். எனவே, இருவரையும் தனது அரவணைப்பில் தந்தையான பாரூக் வளர்த்து வந்தார். மேலும், பாரூக் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பாரூக்கின் 15 வயது மகள் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அதில், கடந்த ஒரு வருடமாக எனது தந்தை தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது பாரூக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!