53 வயசு ஆன்டியுடன் ஏற்பட்ட பயங்கர காதல்... அந்த விஷயத்தில் செம்ம கெமிஸ்ட்ரி.. இறுதியில் நடந்த பயங்கரம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2021, 6:06 PM IST
Highlights

பலமுறை இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். பிரதீப் நாயருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தும், அதை  அந்த பெண்ணிடம் மறைத்துவிட்டார்.  நினைத்தபோதெல்லாம் அந்தப் பெண்ணுடன் உடலுறவு அனுபவித்து வந்தார். 

கணவனிடமிருந்து விவாகரத்து பெற்ற 53 வயது பெண்ணுடன் 44 வயது நபருக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பு விபரீதத்தில் முடிந்துள்ளது. இருவரும் அடிக்கடி உடலுறவில் ஈடுபட்ட புகைப் படங்களை அந்த நபர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீப் நாயர், அதே மாநிலத்தைச் சேர்ந்த 53 வயது பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அந்தப் பெண் ஏற்கனவே கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார், இருவரும் தொடர்ந்து பேஸ்புக்கில் சாட்டிங் செய்து வந்த நிலையில், இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. இருவரும் தொலைபேசி எண்களை பகிர்ந்து கொண்டதுடன் அடிக்கடி நேரடியாக சந்தித்து பழகி வந்தனர். 

இதையும் படியுங்கள்: வசமாக சிக்கினாரா விஜய பாஸ்கர்.?? கூடுதலாக 5 இடங்களில் சோதனை.. அலறும் அதிமுக தொண்டர்கள்.

பலமுறை இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர். பிரதீப் நாயருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தும், அதை  அந்த பெண்ணிடம் மறைத்துவிட்டார்.  நினைத்தபோதெல்லாம் அந்தப் பெண்ணுடன் உடலுறவு அனுபவித்து வந்தார். அதே நேரத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்தப்  தனிமையில் இருக்கும் போதெல்லாம் அந்த பெண்ணுடன் நிர்வாணப் புகைப்படம் எடுத்துக்கொண்டார் பிரதீப், ஒருக்கட்டத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வந்த நிலையில், அவர்கள் பல இடங்களில் சுற்றி திரிந்தனர். ஒவ்வொரு முறையும் இந்த ஜோடி வெளியில் செல்லும்போதும் பிரதீப் நாயர் அந்தப் பெண்ணுக்கு அதிக பணம் செலவழிப்பார், அந்தப் பெண்ணும் தனது வருங்கால கணவன் என்ற அடிப்படையில் பிரதீப்பின் அனைத்து விதமான செயல்களும் அனுமதித்தார். பல மாதங்களாக இருவரும் கட்டுக்கடங்காத காதலர்களாக உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் வலியுறுத்தினார். 

இதையும் படியுங்கள்: விஜயபாஸ்கர் வீட்டு வாசலில் பரபரப்பு.. போலீசுடன் மோதிய அதிமுக வழக்கறிஞர் அணி.. அசைக்க முடியாது என சவால்.

ஆனால் பிரதீப் நாயர் திடீரென அதற்கு சம்பதிக்கவில்லை, தனக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். அதைக்கேட்ட அந்தப் பெண் மனமுடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, பிரதீப் நாயரை பிரிய அந்த பெண் முடிவெடுத்தார். இதனால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான பிரதீப் நாயர் அந்த பெண்ணுடன் தான் தனிமையில் இருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் உலா வருவதை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்து, பிரதீப் நாயர் மீது போலீசால் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் பிரதீப் நாயரை கைது செய்தனர். சமூகவலைதளத்தில் முகம் தெரியாதவர்களுடன் பழகுவது எவ்வளவு ஆபத்தானது  என்பது குறித்தும் போலீசார் பொதுவாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

click me!