மனைவி ஊருக்கு சென்றிருந்தபோது மகளை கற்பழித்து கர்ப்பமாக்கிய கணவன்… பெண்டு எடுத்த போலீஸ் ….

By Selvanayagam PFirst Published Nov 11, 2018, 8:00 AM IST
Highlights

திண்டுக்கல் அருகே காம கொடூரன் ஒருவன் தான் பெற்ற மகளையே மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த நரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால முருகன். இவரது மனைவி ஜோதி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி என்ற 14 வயது மகள் உள்ளார். அங்குள்ள பள்ளி ஒள்றில் ஆனந்தி படித்து வருகிறார்

இந்நிலையில், பாலமுருகனின் மனைவி  ஜோதி தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். வீட்டில் பாலமுருகனும் அவரது மகள் ஆனந்தியும் மட்டுமே இருந்தனர். அப்போது மது குடித்துவிட்டு வந்த பாலமுருகன் தனியாக இருந்த மகள் ஆனந்தியை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் கற்பழித்துள்ளார்.

இது போன்று நாள்தோறும் பல முறை தனது மனைவி ஊரில் இருந்து வருவதற்குள் பாலமுருகன் கற்பழித்துள்ளார்.  இதனால், அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளாள். அதனை கண்டுப்பிடித்த அவளது தாயார் கேட்ட போது, வேறு வழியில்லாமல் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜோதி, தனது கணவர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து ஸ்டேஷனில் வைத்து நல்ல ட்ரீட்மெண்ட் கொடுத்துள்ளனர்.

பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

click me!