மாமனார் முன் மருமகளை நிர்வாணப்படுத்திய மாமியார்.. இறுதியில் 18 வயது இளமபெண் எடுத்த விபரீத முடிவு..!

By vinoth kumarFirst Published Jul 28, 2021, 5:12 PM IST
Highlights

வரதட்சணை கேட்டு எனது மாமனார், மாமியார் ஆகியோர் உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை செய்தனர். மேலும், எனது மாமனார் முன்னால் நிர்வாணப்படுத்தினர். அதன் காரணமாகவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். 

வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதோடு மாமனார் முன்பு நிர்வாணப்படுத்தியதால் இளம் பெண் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் இதேபோன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் இதுபோன்ற கொடுமை அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பாகூரை சேர்ந்தவர் பைருலால் என்பவரின் 18 வயது மகள் பிரியாவுக்கு கடந்த ஏப்ரல் 26ம் தேதி பில்வாரா மாவட்டம் பந்திர் பகுதியைச் சேர்ந்த முகேஷ் சான்ஸி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடந்த சில நாட்களிலேயே வரதட்சணை கேட்டு பிரியாவை அவரது மாமனார் , மாமியார் ஆகியோர் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், கணவர் முகேஷ் சான்ஸி மற்றும் அவரது பெற்றோர் பிரியாவை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். சில நாட்கள் சென்ற நிலையில் மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.  கடந்த ஜூலை 20ம் தேதி வரதட்சணை கேட்டு பிரியாவை அவரது மாமனார், மாமியார் ஆகியோர் அடித்து உதைத்துள்ளனர். இதனால், வேதனை அடைந்த பிரியா ஜூலை 22ம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பிரியா தற்கொலை செய்து கொள்ளும் முன் தனது தற்கொலைக்கான காரணம் தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், வரதட்சணை கேட்டு எனது மாமனார், மாமியார் ஆகியோர் உடல் ரீதியாக பல்வேறு கொடுமைகளை செய்தனர். மேலும், எனது மாமனார் முன்னால் நிர்வாணப்படுத்தினர். அதன் காரணமாகவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வீடியோவை ஆதாரமாக வைத்து பிரியாவின் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!