டெல்லியைப் போன்றே வங்கதேசத்திலும் காதலித்த இளம் பெண்ணை பல துண்டுகளாக வெட்டிக் கொன்ற காதலன்!

Published : Nov 18, 2022, 03:38 PM IST
டெல்லியைப் போன்றே வங்கதேசத்திலும் காதலித்த இளம் பெண்ணை பல துண்டுகளாக வெட்டிக் கொன்ற காதலன்!

சுருக்கம்

டெல்லியில் நடந்தது போன்றே வங்கதேசத்திலும் இளம் பெண்ணை காதலித்து துண்டு துண்டாக வெட்டி வீசி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கதேசத்தை சேர்ந்த அபு பக்கர் என்பவர் கவிதா ராணியை காதலித்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 6ஆம் தேதியில் இருந்து அபு பக்கரை காணவில்லை. போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அபு பக்கர் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவரை தேடி அவர் குடியிருக்கும் வாடகை வீட்டுக்கு ஆள் அனுப்பி உள்ளார். வீட்டின் வெளியே தாள் போடப்பட்டு இருந்துள்ளது. இதையடுத்து சந்தேகம் வலுக்க வீட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விரைந்து வந்து வீட்டுக் கதவை திறந்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தலையில்லாமல் ஒரு பெண்ணின் உடல் பெட்டியிலும், தலை பாலிதீன் கவரில் கட்டி தனியாகவும் வைக்கப்பட்டுள்ளது. கைகளை காணவில்லை. விசாரணையில் காளிபாட் பச்சர் என்பவரின் மகள் கவிதா ராணி என்பது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து போலீசார் கடந்த 7ஆம் தேதி அபு பக்கரையும் அவருடன் திருமணம் செய்யாமல் வசித்து வந்த சப்னா என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கோபர்சாகா ஸ்கொயரில் ஒன்றாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Explanation:ஷ்ரத்தா வாக்கர் கொலை; ஃபிரிட்ஜில் பிணம்; மற்றொரு காதலியுடன் உல்லாசம்; அதிர்ச்சி தகவல்கள்!

கொலை செய்வதற்கு ஐந்து நாட்களுக்கு முன்புதான் அபு பக்கருடன் கவிதா நெருங்கி பழகி இருக்கிறார். இந்த நிலையில்தான் கவிதாவை பல துண்டுகளாக அபு பக்கர் வெட்டியுள்ளார். கடந்த நவம்பர் 5ஆம் தேதி தனது வாடகை வீட்டுக்கு கவிதாவை அபு பக்கர் அழைத்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபு பக்கர் கவிதாவின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். தலையை தனியாகவும், கைகளை தனியாகவும் வெட்டியுள்ளார். கைகளை அங்கே இருக்கும் கால்வாயில் வீசி எறிந்துள்ளார். தலையை பாலிதீன் கவரில் வைத்து விட்டு, உடலை அங்கே இருந்த பெட்டி ஒன்றில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

நாட்டையே அதிர வைத்த பயங்கர கொலை வழக்குகள்..!

இதையடுத்து தனது மற்றொரு காதலியான சப்னாவுடன் ருப்சா ஆற்றைக் கடந்து டாக்காவுக்கு அபு பக்கர் தப்பிச் சென்றுள்ளார். போலீசாருக்கு புகார் வந்ததையடுத்து தீவிர விசாரணைக்குப் பின்னர் கவிதாவின் உடலை கண்டறிந்தனர். பின்னர் காசிபூர் மாவட்டத்தில் அபு பக்கர் மற்றும் அவரது காதலி சப்னாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கொலை செய்ததை அபு பக்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை