மருமகள் மீது தீராத ஆசை.. உல்லாசத்துக்கு மறுத்ததால் கொலை? கைதான மாமனாரிடம் போலீசார் தீவிர விசாரணை.!

By vinoth kumarFirst Published Sep 28, 2022, 10:49 AM IST
Highlights

வளர்ப்பு தந்தையான முருகேசன் மருமகள் மீது தீராத ஆசை ஏற்பட்டுள்ளது. மகன் இல்லாத நேரத்தில் மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். 

செங்கோட்டையில் குடும்ப தகராறில் மருமகள் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஆசைக்கு இணங்க மறுத்ததால் மருமகள் செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.  

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள லாலா குடியிருப்பு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் இசக்கிராஜ் (34). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பார்வதி (29).  இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், இசக்கிராஜ் வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி மட்டுமே வீட்டில் இருந்தார் அப்போது வீட்டிற்கு வந்த இசக்கிராஜின் தந்தை முருகேசனுக்கும், மருமகள் பார்வதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முருகேசன், பார்வதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது பார்வதி சடலமாக கிடந்தார். 

இதையும் படிங்க;- புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி முருகேசனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக போலீசார் கூறுகையில்;- முருகேசனுக்கு குழந்தை இல்லாததால் இசக்கிராஜை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். முதல் மனைவியை இசக்கிராஜியை பிரிந்து சென்றதால் பத்மாவதியை 2-வதாக அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், வளர்ப்பு தந்தையான முருகேசன் மருமகள் மீது தீராத ஆசை ஏற்பட்டுள்ளது. மகன் இல்லாத நேரத்தில் மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று பத்மாவதி வீட்டில் தனியாக இருந்தபோது முருகேசன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது முருகேசன் ஆத்திரத்தில் பத்மாவதியின் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அனைவரையும் நம்ப வைப்பதற்காக மருமகள் அடிக்கடி செல்போனில் பேசியதாவும், அவளது நடத்தை சரியில்லை என்றும் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  உல்லாசத்துக்கு மறுப்பு? ரிசாட்டில் 19 வயது இளம்பெண் கொடூர கொலை.. முக்கிய பாஜக தலைவரின் மகன் சிக்கினார்..!

click me!