மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவருவாதாக தந்தை மீது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியானா மாநிலம் பானிபட்டின் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துவருவாதாக தந்தை மீது மகன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியானா மாநிலம் பானிபட்டின் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 6 வயது குழந்தை முதல் 60 வயது கிழவிகள் வரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசும், காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்த வரிசையில் பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- அரியானா மாநிலம் பானிபட் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மூத்த மகளான தன்னை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே மகள் என்றும் பாராமல் என் தந்தை அருவருப்பான முறையில் நடந்து கொண்டார், அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். தற்போது எனது தங்கைக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். ஆசைக்கு இணங்குமாறு போதை மாத்திரை கொடுத்து உடலுறவில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படியுங்கள்: காதலனுடன் சேர்ந்து வாழ மனைவி போட்ட ஸ்கெட்ச்... கணவனை குடிக்க வைத்து நடு காட்டில் பயங்கரம்.
இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த நான் எனது தந்தையிடம் இருந்து மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என கோரிக்கை வைத்துள்ளார். தனது தந்தையால் பாதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், தனது நண்பர்களின் உதவியுயுடன் இந்த புகாரை கொடுத்துள்ளார். தனக்கு நடந்த அதே கொடுமையை தனது தங்கை அனுபவித்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து செக்டார் 29 தொழிற்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் புகார் கொடுத்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், உடனே புகாரை திரும்பப் பெற வேண்டும் என்ற தனது தந்தை மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களில் பாட்டியும் குற்றம்சாட்டப்பட்டவர் தாயார், எனது மகன் ஒழுக்கமானவன், நிரபராதி என்று கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் இல்லாத தால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர் . மகளே தந்தை மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஐஐடி மாணவியை இருட்டில் வைத்து பலான இடங்களில் கை வைத்து வக்கிரம்.. கேண்டின் ஜூஸ் மாஸ்டர் கைது.