டாடி, மம்மி வீட்டில் இல்ல.. இளம் பெண் நண்பர்களுடன் உல்லாசம்.. தடையாக இருந்த காவலாளியின் மண்டை உடைந்தது.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 4:09 PM IST
Highlights

அப்போது அதை பார்த்த குடியிருப்பு செக்யூரிட்டி புருஷோத்தமன் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத போது இப்படி குடித்து விட்டு ஆண் நண்பர்களுடன் வீட்டுக்கு வரலாமா? இது பெற்றோர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள், இளம் வயதில் அறியாமல் இப்படி செய்கிறீர்கள்,

உல்லாசத்துக்கு தடையாக இருந்த காவலாளியை இரும்பு பைப்பால் அடித்து மண்டை உடைத்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி, ஸ்ரீதேவி நகர், சர். வி. ராமன் தெருவை சேர்ந்தவர் புருசோத்தமன் (48). இவர், ஆவடி அருகே சேக்காடு கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு புருசோத்தமன் வளாகத்தில் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வசிக்கும் ஒரு இளம் பெண், இரு வாலிபர்கள், ஒரு பெண் தோழியுடன் மதுபோதையில் வளாகத்துக்குள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனை பார்த்த புருஷோத்தமன் இரவில் வெளியே நடமாட கூடாது என அறிவுரை கூறி உள்ளார். இதனையடுத்து, காவலாளி புருசோத்தமனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், தகராறு ஏற்பட்டு அவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை கைகளால் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து, புருசோத்தமன் தலையில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில், அவரது மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதனை பார்த்த 4பேரும் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்கள். சத்தம் கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்கள் ஓடி வந்து உள்ளனர். பின்னர், அவர்கள் புருசோத்தமனை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். 

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து காவலாளி புருசோத்தமன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் லட்சுமிபிரியா (20), ஆவடி, ஓ.சி.எப் குடியிருப்பு, கிரி நகரைச் சார்ந்த விக்னேஷ் (20) உட்பட நான்கு பேர்கள் காவலாளி புருசோத்தமனை தாக்கியது தெரியவந்தது. அதாவது, நேற்றிரவு தனது காதலர் மற்றும் தோழி அவரது ஆண்  நண்பருடன் லட்சுமி பிரியா போதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார். 

அப்போது அதை பார்த்த குடியிருப்பு செக்யூரிட்டி புருஷோத்தமன் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத போது இப்படி குடித்து விட்டு ஆண் நண்பர்களுடன் வீட்டுக்கு வரலாமா? இது பெற்றோர்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள், இளம் வயதில் அறியாமல் இப்படி செய்கிறீர்கள், நீங்கள் இப்படி செய்யலாமா அம்மா? என இந்த பெண்ணுக்கு புருஷோத்தமன் அறிவுரை கூறியுள்ளார். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது, இதனால் ஆத்திரத்தில் இருகில் இருந்த பைப்பை எடுத்து அடித்து மண்டை உடைத்துள்ளனர், என  போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக,  தலைமறைவாக இருந்த லட்சுமி பிரியா, விக்னேஷ் இருவரையும் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

click me!