ப்ளூ பிலிம் போட்டு காட்டி பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் தந்தை.. போக்சோ சட்டத்தில் கைது.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 8:41 AM IST
Highlights

 கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதா இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

பெற்ற மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் துறையைச் சேர்ந்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். சென்னை எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிப்புரிந்து வருபவர் இளங்கோவன். இவரது மனைவி ஆசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர்கள் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு 12 வயது மற்றும் 10 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தனது போலீஸ் கணவர் இளங்கோவன் மீது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்தார். 

ஆனால் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதா இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாலியல் தொல்லை கொடுத்த காவல்துறையைச் சேர்ந்த தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 14 வருடங்களாக தனது  கணவர் தன்னுடன் சண்டையிட்டு வருவதாகவும், தினமும் குடித்துவிட்டு தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் ஆபாச படங்களை தனது குழந்தைகளை காண்பித்து வருகிறார்.

இது குறித்து கணவரிடம் கேட்டால் போலீஸ் அடி எப்படி இருக்கும் எனக்கூறி தன்னையும் தனது மகளையும் தாக்குவதாக அவர் கூறினார். இதனால் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளபோவதாக தன்னிடம் கூறுவதாகவும், இதனால் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட தனது கணவரை தட்டிகேட்டதற்கு தன்னை தாக்கியதால் மனமுடைந்து தான் மற்றும் மகளும் பீர்பாட்டிலை மிக்ஸியில் போட்டு அரைத்து குடித்ததாக அவர் கூறினார். 

 

இதனை அடுத்து இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவர உடனடியாக விசாரணையை தொடங்குமாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அமுதாவுக்கு உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் தனது இரண்டு பெண் பிள்ளைகளான 10 மற்றும் 12 வயது கொண்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் துறையைச் சார்ந்த சொந்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

click me!