அண்ணியை ஓயாமல் உல்லாசத்து அழைத்த கொழுந்தன்! விஷயம் தெரிந்த அண்ணன்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

Published : Jun 03, 2024, 07:00 AM ISTUpdated : Jun 03, 2024, 07:05 AM IST
அண்ணியை ஓயாமல் உல்லாசத்து அழைத்த கொழுந்தன்! விஷயம் தெரிந்த அண்ணன்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

சுருக்கம்

கர்நாடகா மாநிலம் சவுடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.

அண்ணியை உல்லாசத்துக்கு அழைத்த தம்பியை தட்டிக் கேட்ட அண்ணன் குத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சவுடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத்(45). இவரது சகோதரர் குமார்(39). தனது அண்ணன் பிரசாத்தின் மனைவியை குமார் அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதுதொடர்பாக மனைவி கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால்,  ஆத்திரமடைந்த அண்ணன் பிரசாத் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த தனது தம்பியை கண்டித்துள்ளார். 

இதையும் படிங்க: நான் கூப்பிடும் போதெல்லாம் உல்லாசத்திற்கு வரலைன்னா! வீடியோவை வெளியிட்டு விடுவேன்! பெண்ணை மிரட்டிய வாட்ச்மேன்!

இதனாால் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது உன் மனைவி இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குமார் குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அண்ணன், தம்பிக்கு இடையே வாய்ப்பு பேச்சு கைகலப்பானது

அப்போது ஆத்திரமடைந்த குமார், கத்தியால் தனது அண்ணன் பிரசாத்தை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அண்ணணை கொலை செய்த தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க:  என் நம்பரையே பிளாக் செய்றியா.. தூங்கிக் கொண்டிருந்த கள்ளக்காதலி.. ஜன்னல் வழியாக கள்ளக்காதலன் செய்த வேலை!

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!