அழகான பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி உல்லாசம்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கயவன் கைது.

By Ezhilarasan BabuFirst Published Apr 4, 2022, 10:55 AM IST
Highlights

தென்காசி சேர்ந்த இளம்பெண் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் சுப்ரமணியம் இளம் பெண்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வருவதும், போதைக்கு அடிமையாகும் பெண்களுடன்  முதலில் தான் உல்லாசம் அனுபவிப்பதுடன்,
 

இளம் பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி அவர்களுடன் உல்லாசத்தில் ஈடுபட்டதுடன், அப்பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் வட சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடசென்னை பகுதியில் போதை மாத்திரை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் அதை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில் கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் போதை மாத்திரைக்கு அடிமையான ஒரு பெண் உட்பட இருவர் வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் அருகே சொகுசு காரில் அரை போதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பேட்ரோலில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் பிரான்வின்டேனி,  மற்றும் போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு பெண் உட்பட இருவரை அரை மயக்கத்தில் இருந்தனர். மேலும் அவர்களிடம் மெதம்பியேட்டமின் போதை மாத்திரைகள்,  எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் இருந்தது. அவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலிசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அண்ணா நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பதும், தென்காசி சேர்ந்த இளம்பெண் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் சுப்ரமணியம் இளம் பெண்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்து வருவதும், போதைக்கு அடிமையாகும் பெண்களுடன்  முதலில் தான் உல்லாசம் அனுபவிப்பதுடன்,

பின்னர் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அதாவது பாலசுப்ரமணியன் அழகான பெண்களை குறிவைத்து போதை மாத்திரை வழங்குவார், அப்போது அவர்கள் போதைக்கு அடிமையானது பின்னர் அவர்களுக்கு மாத்திரை கொடுக்காமல்  நிறுத்தி விடுவார் அப்போது அவர்கள் எதை சொன்னாலும் செய்ய தயார் என்ற நிலைக்கு வருவார்கள், மொத்தமாக அவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பின்னர் போதைக்கு அடிமையான பெண்களிடம் உல்லாசமாக இருப்பார். பின்னர் அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவரை அவர் வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் என்பதை தெரிய வந்தது. பாலசுப்ரமணியம் மற்றும் அவருடன் இருந்த பெண் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர்.

மேலும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்த  இரண்டு இளம் பெண்களை மீட்டு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். அதேபோல் பாலசுப்ரமணியன் சென்னையில் பிற போதை மாத்திரை விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்து வந்ததும்  தெரிய வந்துள்ளது. பாலசுப்ரமணியன் வலையில் சிக்கி ஏராளமான பெண்கள் சீரழிந்து இருப்பது தெரியவந்துள்ளது. 

click me!