யாரு அவன்..? மனைவி தலையில் அம்மி கல் போட்ட சந்தேக கணவன்.

By Ezhilarasan BabuFirst Published Jul 29, 2022, 6:15 PM IST
Highlights

மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் இருப்பதாக சந்தேகித்து வந்த கணவன் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ள காதல் இருப்பதாக சந்தேகித்து வந்த கணவன் மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

குடும்ப வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் எதுவரினும் கணவன் மனைவி ஒத்து இல்லறம் செய்வதே நல்லறமாகும். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை இழப்பது, கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் அவமானப்படுத்துவது, நடத்தையில் சந்தேகப்பட்டு வாழ்க்கையை சூன்யமாக்கிக் கொள்வது,  ஒரு கட்டத்தில் திருமண உறவை முறித்துக் கொள்வது போன்ற சம்பவங்களும் பரவலாக அதிகரித்து வருகிறது. 

இந்த வரிசையில் திருமணமாகி 11 ஆண்டுகள்  கடந்த பின்னர்  மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் கல்யாண துர்க்கம் மண்டலம் மல்லிகார்ஜுனா பள்ளியைச் சேர்ந்தவர் நாகர்ஜுனா(32) இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இருவரும் காதலித்தாலும் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியருக்கு 8 வயதில் ஒரு மகனும் 4 வயதில் மகளும் உள்ளனர். திருமணமாகி குழந்தைகள் பிறக்கும் வரை தம்பதியர் மகிழ்ச்சியாகவே இருந்தனர்.

ஆனால் கடந்த சில வருடங்களாக நாகார்ஜுனாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது, மனைவி யாருடன் பேசினாலும் அவர்களுடன் மனைவிக்கு தவறான உறவு இருக்குமோ என கணவன் சந்தேகித்து வந்தார், இதனால் மனைவியுடன் அன்றாடம் தகராறு செய்தது அடிப்பது உதைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு  வந்தார். ஒருகட்டத்தில் நாகர்ஜூனாவுக்கு மனைவியின் மீது சந்தேகம்  முற்றியது, இதனால் மனைவியை தீர்த்துக்கட்ட நாகார்ஜுனா முடிவு செய்தார் அதற்க்காக நேரம் பார்த்து காத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவியை சந்தேகத்தின்பேரில் நாகார்ஜுனா அடித்து உதைத்தார்.

பிறகு வழக்கம் போல மனைவியை இரவு தூங்கச் சென்றார், படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார், அப்போது நாகர்ஜூனா மனைவியின் தலையில் அம்மிக்கல் போட்டார், அதில் மனைவியின்  ஆ என அலறினார், இதனால் அவரது குழந்தைகள் துடித்து எழுந்தனர், தாய் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு கதறினர், சரஸ்வதி ரத்தவெள்ளத்தில் மிதந்தார், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் தலையில் கல்லைப் போட்டு விட்டு தலைமறைவான கணவன் நாகார்ஜுனாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
 

click me!