மனைவியை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு.. காதலியை கூட்டிவந்து உல்லாசம்: அசிங்கத்தை நேரில் பார்த்த மனைவி.

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2022, 8:39 AM IST
Highlights

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கள்ளக்காதலியின் குடும்பத்தார்  சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மனைவியை அடித்து மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கள்ளக் காதலியை அழைத்து வந்து கணவன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த  சம்பவம் நடந்துள்ளது.

கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கள்ளக்காதலியின் குடும்பத்தார்  சரமாரியாக தாக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. மனைவியை அடித்து மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கள்ளக் காதலியை அழைத்து வந்து கணவன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறிவருகிறது.  திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும்  அந்த உறவில் நம்பிக்கை இழக்கும் போது மூன்றாவது உறவைத் நாடிச் செல்கின்றனர். அது கள்ளக்காதலாக மாறி குடும்ப வாழ்க்கையையே சீரழித்து விடுகிறது. 

இறுதியில் கொலை, அல்லது தற்கொலையில் போய் முடிகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முறையான சட்ட திட்டங்கள் இல்லாத நிலையில் இது பரவலாக நடந்தேறி வருகிறது. இந்த வரிசையில் மனைவியை அடித்து மாமியார் வீட்டிற்கு அனுப்பிய கணவன் கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்: கள்ளக்காதலியை கொளுத்திய கள்ளக்காதலன்… பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்… வேலூரில் பரபரப்பு!!

முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம்  சித்தூர் மாவட்டம் அன்னமையா மண்டலம்  மதன பள்ளியைச் சேர்ந்தவர்கள் சங்கர் அப்பா நாயுடு -சுசீலாம்மா தம்பதியர் இவர்களின் மகன் பால பிரசாத், இவருக்கும் கர்நாடக மாநிலம் கோலார் பெத்தாமங்கலத்தை அடுத்த சியமரஹள்ளியைச் சேர்ந்த  சுதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 8 ஆண்டுகளாக அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். இவர்களது திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது, ஒரு கட்டத்தில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:  பிரேக்அப் செய்த காதலி.. சோசியல் மீடியாவில் காதலியின் ஆபாச வீடியோவை காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

சமீபகாலமாக மனைவி மீது கணவன் நாட்டமில்லாமல் இருந்து வந்தார், அப்போதுதான் ,அதே கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பால பிரசாத்திற்கு திருமணத்துக்கு புறம்பான உறவு ஏற்பட்டது, இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். கள்ளக் காதலியின் மீது நாட்டம் அதிகமானதால், மொத்தமாக மனைவியை ஓரங்கட்ட பால பிரசாத் முடிவு செய்தார், அதுமுதல் மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து கொடுமை செய்து வந்தார்,  வரதட்சணை வாங்கி வந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் என உறுதியாக கூறி வந்தார். ஒரு கட்டத்தில் பால பிரசாத்தில் சித்திரவதை தாங்க முடியாமல் மனைவி சுதா தாய் வீட்டுக்கு சென்றார்.

இதை பயன்படுத்திக் கொண்ட கணவன் பாலபிரசாத், கள்ளக்காதலியை வீட்டுக்கு அழைத்துவந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். பின்னர் ஓரேயடியாக கள்ளக்காதலியுடன் குடும்பம் நடத்தத் தொடங்கினார். சில மாதங்கள் கழித்து தகவலறிந்து வீட்டுக்கு வந்த மனைவி கணவன் மற்றும் கள்ளக்காதலி ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். ஆனால் கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து மனைவி சுதாவை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சுதா, மதனப்பள்ளி ஊரக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

click me!