வீட்டுக்கு வந்த மாணவிக்கு கிரேப் ஜூஸ்... கட்டிலில் தூக்கி போட்டு உல்லாசம்.. 3 முறை கரு கலைத்த பேராசிரியர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 18, 2022, 6:36 PM IST
Highlights

வீட்டுக்கு வந்த மாணவிக்கு கிரேப் ஜூஸ் கொடுத்து கல்லூரி பேராசிரியர்கள் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருச்சியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- 

வீட்டுக்கு வந்த மாணவிக்கு கிரேப் ஜூஸ் கொடுத்து கல்லூரி பேராசிரியர்கள் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருச்சியில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:-  திருச்சியில் அதிக அளவில்  ஏழை எளிய மாணவர்கள் பயிலும் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அந்த கல்லூரி பேராசிரியர்கள் நடத்தியுள்ள பாலியல் வக்கிரம் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளை நிலைகுலைய செய்துள்ளது. 

சர்ச்சைக்கு ஆளாகியுள்ள அந்த கல்லூரியில் ஆங்கிலத்துறை இயங்கி வருகிறது. அதில் ப்ராஜெக்ட் பொறுப்பாளராக மூத்த பேராசிரியர் இருந்து வருகிறார். இந்நிலையில் அந்த பேராசிரியர் மனைவிகளுக்கு ஆங்கில மொழி கற்றுக் கொடுப்பது, இன்னும் பல பயிற்சி வகுப்புகளில் ஈடுபடுத்துவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். புராஜக்டில் ஒர்கில் எந்த சந்தேகம் இருந்தாலும் வீட்டுக்கு வரலாம் என மாணவிகளிடம் அவர் கூறியுள்ளார். மாணவிகளிடம் ஆசிரியர் மிகவும் சகஜமாக பழகுவதால் அவர் மீது மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: ஹவுஸ் ஓனருடன் உல்லாசம்.. மனைவியின் துரோகத்தால் பெண்களை தேடி தேடி கொன்ற சைக்கோ கணவன்.

அந்தவகையில் ஆசிரியரின் வீடு தேடி மாணவி ஒருவர் சென்றிருந்தார். ஆசிரியர் அந்த மாணவிக்கு திராட்சை ரசம் குடிக்க கொடுத்ததாகத் தெரிகிறது, யார் வீட்டுக்கு வந்தாலும் அவர் கிரேப் ஜூஸ் கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் கிரேப் ஜூஸ் குடித்த அந்த மாணவிக்கு தலைசுற்றல் ஏற்பட்டது, அதனால் அந்த மாணவியை பத்திரமாக கட்டிலில் படுக்க வைத்து அவர் அந்த  மாணவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அந்த மாணவியும் அடிக்கடி பேராசிரியர் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது மற்றொரு இளம் பேராசிரியர் ஒருவரும் சீனியர் பேராசிரியருடன் கைகோர்த்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  முன்னாள் வன்னியர் சங்க நிர்வாகி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

இதில் இருவரும் சேர்ந்து மாணவியை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவி மூன்று முறை கர்ப்பமாகி உள்ளனார். மூன்று முறையும் கர்ப்பம் கலைக்கபட்டதாகவும் தெரிகிறது. இதனால் குற்ற உணர்ச்சியில் கடும் மன உளைச்சலுக்கு அந்த மாணவி தள்ளப்பட்டார். மாணவியை சீரழித்து வந்த இளம் பேராசிரியர் தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த மாணவியுடன் மேலும் பல முறை உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. கடும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தான் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு காரணமான ஆசிரியர்களை சும்மாவிடக்கூடாது என முடிவு செய்த அவர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரம் கல்லூரி முழுவதும் பரவியது. இதைக் கேள்விப்பட்ட மாணவிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர், மாணவியின் இந்த புகார் மீது இதுவரை நடவடிக்கை இல்லாததால் மூன்றாவது முறையாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவிக்கு கொடுமை இழைத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 

click me!