61 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா.. லாட்ஜில் ரூம் போட்டு பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது மரணம்.!

By vinoth kumarFirst Published May 25, 2022, 10:19 AM IST
Highlights

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வொர்லியைச் சேர்ந்த 61 வயது முதியவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் குர்லாவில் உள்ள ஒரு லாட்ஜில் தனது 40 வயது காதலியுடன் வந்து தங்கியுள்ளார். நேற்று முழுவதும் அவர்கள் இருவரும் விடுதியை விட்டு வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.

மும்பையில் 61 வயது முதியவர் லாட்ஜில் ரூம் போட்டு 41 வயது பெண்ணுடன் உல்லாசமாக இருந்த போது திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வொர்லியைச் சேர்ந்த 61 வயது முதியவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் குர்லாவில் உள்ள ஒரு லாட்ஜில் தனது 40 வயது காதலியுடன் வந்து தங்கியுள்ளார். நேற்று முழுவதும் அவர்கள் இருவரும் விடுதியை விட்டு வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென வரவேற்பு அறையை தொடர்பு கொண்டு முதியவர் மூச்சு பேச்சில் கிடப்பதாக அவரது காதலி கூறியுள்ளார். உடனடியாக விடுதி ஊழியர்கள் அந்த அறைக்குச் சென்று பார்த்த போது, முதியவர் அரைகுறை ஆடையுடன் கிடந்தார். உடனே மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், முதியவரின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும். மேலும், அவருடன் தங்கியிருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர். 

click me!