தூத்துக்குடியில் கஞ்சா புழக்கமா? 208 வங்கி கணக்குகள் முடக்கம்; 204 பேர் கைது!!

By Narendran SFirst Published Aug 28, 2022, 6:54 PM IST
Highlights

தூத்துக்குடியில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய மற்றும் அவர்களது உறவினர்களின் 208 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 

தூத்துக்குடியில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய மற்றும் அவர்களது உறவினர்களின் 208 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், கஞ்சா விற்பனை செய்பவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் திடீர் தற்கொலை...! காரணம் என்ன..?

அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல், விற்பனை செய்தல் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில், 1 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளின் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, அவற்றை சட்ட ரீதியாக முடக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கைப்பற்றிய வழக்குகளில் தொடர்புடைய 1,351 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 4 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து சீரழித்த அரசு பள்ளி ஆசிரியர்.. தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

மேலும், கைதுசெய்யப்பட்ட 1,351 குற்றவாளிகளில் 908 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு, 470 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதேபோல் 25.08.2022 அன்று மட்டும் 34 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்டோர் மற்றும் அவர்களது உறவினர்களின் 208 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை கஞ்சா விற்பனை, பதுக்கி வைத்ததாக 126 வழக்குகளை எஸ்.பி.பாலாஜி சரவணன் பதிவு செய்துள்ளார். கஞ்சா வழக்குகள் தொடர்பாக 204 பேர் கைது செய்யப்பட்டு 122 கிலோ கஞ்சா மற்றும் 34 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

click me!