கள்ளக்காதல் விவகாரத்தில் இளநீர் வியாபாரி படுகொலை; 2 மணீ நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீஸ்

Published : Oct 25, 2023, 09:53 AM ISTUpdated : Jul 20, 2024, 12:17 AM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் இளநீர் வியாபாரி படுகொலை; 2 மணீ நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீஸ்

சுருக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளநீர் வியாபாரி நீரில் அழுத்தி கொலை செய்த 2 பேரை காவல் துறையினர் 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட எருக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 50). இவருக்கு விசாலாட்சி என்கிற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.ராஜா திருவாரூரில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த வீரமணி என்பவரது மனைவி சங்கீதாவிற்கும் கடந்த ஐந்து வருடங்களாக தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தகாத உறவு குறித்து பல முறை வீரமணி ராஜாவை கண்டித்தும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18ம் தேதி சங்கீதாவின் வீட்டிற்கு சென்ற ராஜாவிற்கும், சங்கீதாவிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜா சங்கீதாவை அடித்ததாகவும் பதிலுக்கு சங்கீதாவும் அவரது மகளும் கட்டையால் ராஜாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

மக்களே குடை, ரெயின் கோட் எல்லாம் ரெடியா.. 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் பொளந்து கட்டப்போகும் மழை..!

அதன் பின்னர் கடந்த 18ம் தேதியில் இருந்து ராஜா வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ராஜாவின் வீட்டில் ராஜா இளநீர் வியாபாரத்திற்காக இளநீர் கொள்முதல் செய்ய வெளியூர் சென்று இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில் ராஜாவின் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வாய்க்கால் மதகில் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது ராஜாவின் உடல் அழுகிய நிலையில்  இருந்துள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள்  இது குறித்து கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த கொரடாச்சேரி போலீசார் மதகிற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ராஜாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கொலை குறித்து விசாரணையில் ஈடுபட்ட காவல் துறையினர் சங்கீதாவின் கணவர் வீரமணி மற்றும் அவரது மைத்துனர் சரவணன் (30) ஆகிய இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த 18ம் தேதி மதுபோதையில் எருக்காட்டூர் மதகிற்கு அருகே நின்று கொண்டிருந்த ராஜாவிடம் தனது மனைவியிடம் தகாத உறவு வைத்துள்ளது குறித்து கேட்டு வீரமணி மற்றும் சரவணன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜாவை அருகில் உள்ள வாய்க்கால் தண்ணீரில் அழுத்தி கொலை செய்து உடலை மதகிற்கு அடியில் மறைத்து வைத்ததாகவும் ஒப்புக் கொண்டனர். 

அமைச்சர்களுக்கான சொகுசு இல்லங்கள் அறிவாலய அறக்கட்டளையில் வாங்கப்பட்டதா? உழைத்து சம்பாதித்ததா? சீறும் வானதி

இதனையடுத்து வீரமணி மற்றும் நாகை மாவட்டம் போலகத்தை சேர்ந்த அவரது மைத்துனர் சரவணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ராஜாவின் உடல் மீட்க பட்ட ஒரு மணி நேரத்தில் குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி