15 வயது சிறுமியிடம் அத்துமீறிய தந்தை; திண்டுக்கல்லில் பெண் பரபரப்பு புகார்

By Velmurugan sFirst Published Dec 5, 2023, 6:16 PM IST
Highlights

திண்டுக்கல் மாவட்டத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்  தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்டது அழகம்பட்டி. அதே பகுதியில் வசித்து வருபவர் செல்வ முருகன். இவர் இதே பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவியின் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கிருஷ்ணவேணி இப்பகுதியில் கூலி வேலைக்கு சென்று வருவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தனது மகள்களை வளர்ப்பதாகவும் தனது துணைக்கு தனது தந்தையுடன் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது  பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டாவது மகள் கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்துள்ளார். இதனால் தனது மகளிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கிருஷ்ணவேணி விசாரித்துள்ளார். 

நல்ல அதிகாரிகளின் செயல்பாட்டால் வெள்ளத்தில் இருந்து சென்னை மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் - டிடிவி தினகரன்

அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தந்தை செல்வ முருகன் வீட்டிற்கு வந்ததாகவும், தன்னிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஒரு கட்டத்தில் கீழே தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் இதை வெளியில் கூறினால் கொலை செய்த விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதனால் தன்னிடம் சொல்லவில்லை என்றும் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். எனது மகளுக்கும், எனக்கும் பாதுகாப்பு இல்லை. எனக்கும், எனது மகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். தகாத முறையில் நடந்து கொண்ட தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனுவை வழங்கினார்.

click me!