ஆசை வார்த்தை கூறி 14 வயது சிறுமியுடன் ஆசை தீர உல்லாசம்.. 36 வயது காமக்கொடூரனை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

By vinoth kumarFirst Published Jul 1, 2021, 6:45 PM IST
Highlights

பவானிசாகர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பவானிசாகர் அருகே 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் திடீரென மாயமானார். இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மாயமான தனது மகளை மீட்ககோரி சத்தியமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், அந்தியூர் அருகே உள்ள பூனாச்சி பகுதியில் சிறுமி இருப்பதை கண்டறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். அப்போது சிறுமியுடன் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபர் பெயர் சூசைராஜ் (36) கட்டிட தொழிலாளி என்பதும், அவருக்கு திருமணமாகி விட்டதும் தெரியவந்தது. சூசைராஜ் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சூசைராஜை சத்தியமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

click me!