
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடந்த இவர்களுடைய திருமணத்தில், பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்தை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த், கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள், கணவருடன் குழந்தை வேத் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் விசாகன் இருவரும் சேர்ந்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர்.
அதில் முதல் முறையாக சௌந்தர்யா - விசாகன் சந்திப்பு முதல் திருமணம் வரை நடந்த ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த பேட்டியில், தொகுப்பாளர்... இருவரில் யார் மிகவும் ரொமான்டிக் எனக் கேட்டதற்கு, விசாகன் சௌந்தர்யா தான் மிகவும் ரொமான்டிக்கான நபர் கூறினார். இதற்கு சௌந்தர்யாவும் இதனை ஒப்புக் கொள்வதாக கூறினார்.
மேலும் தன்னுடைய கணவர் விசாகம் மிகவும் ரொமான்டிக்கான நபர் தான். ஆனால் நான் சாக்லேட், மெழுகு வத்தி என போன்ற வற்றை பயன்படுத்தி தன்னுடைய காதலை வெளிப்படுத்துவேன். அவர் தன் அக்கறையை வெளிப்படுத்தி காதலை நிரூபிப்பார் எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.