சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் துவங்கி நுங்கம்பாக்கம் வரை 5 கிலோமீட்டர் தூரம் பேரணி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் நடிகை நயன்தாரா.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் துவங்கி நுங்கம்பாக்கம் வரை 5 கிலோமீட்டர் தூரம் பேரணி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார் நடிகை நயன்தாரா.
இந்நிலையில் அவர் சூரிய வெளிச்சம்படும் வகையில் தொடை தெரியும் வகையில் போஸ்கொடுத்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு கருத்து தெரிவித்துள்ள அவரது ரசிகர்கள், கண்றாவி என்ன ட்ரெஸ் இது? பாவாடை போடாமல் வந்து விட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு முன் அவர் வருமான வரித்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து, ‘’எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கும் நயன்தாரா எதற்காக இந்த நிகழ்ச்சியில் மட்டும் சிரித்த முகமாக கலந்து கொண்டார் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். வருமான வரித்துறை நடத்தியதால் தான் கலந்து கொண்டிருப்பார். வரி என்ற வார்த்தையை கேட்டதும் வம்பு எதற்கு என்று வர்றேன் சார் என நிகழ்ச்சியில் சமத்தாக பங்கேற்றிருப்பார் என்று சிலர் அவர்களாகவே ஒரு காரணத்தை தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா ஏன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என நெட்டிசன்கள் விவாதிப்பதை பார்த்த ரசிகர்களோ, தலைவி தான் கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகை. அதனால் மகளிர் தின நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அழைத்திருப்பார்கள். உடனே வருமான வரித்துறை என்பதால் பயந்து கொண்டு பங்கேற்றார் என்று கிளப்பி விடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
எது எப்படியோ, நயன்தாரா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அனைவரும் அவரைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவர் நிகழ்ச்சிக்கு வராவிட்டாலும் சரி, வந்தாலும் சரி அனைவரின் கவனமும் அவர் மீது தான் உள்ளது. இதை தான் பல நடிகைகள் விரும்புகிறார்கள். ஆனால் பாவம், அவர்களுக்கு இந்த அளவுக்கு அமைவது இல்லை. அதற்கு எல்லாம் ஒரு லக் வேண்டும், அது நயனுக்கு உள்ளது.