பொதுகுழு கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு அழைப்பு விடுக்க வில்லை - விஷால் அதிரடி.....!!!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
பொதுகுழு கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதாரவிக்கு அழைப்பு விடுக்க வில்லை - விஷால் அதிரடி.....!!!

சுருக்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுகுழு கூட்டம் வரும் 27ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது என நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், செவாலியே விருது பெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் இந்த விழாவிற்கு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமாருக்கும், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாவிக்கும் அழைப்பு விடுக்கவில்லை என பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார்.
 
மேலும் இந்த பொதுகுழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்யவுள்ளதாவும் விஷால் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனிருத்துக்கு 'MDS' எனப் பெயர் வைத்த தளபதி விஜய்! அப்படின்னா என்னன்னு தெரியுமா? வைரலாகும் பின்னணி!
3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை; பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் திரையுலகம்!