வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய சுதீப்.....!!!

Asianet News Tamil  
Published : Nov 09, 2016, 07:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு தாவிய சுதீப்.....!!!

சுருக்கம்

கன்னட படங்களில் முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் நடிகர் சுதீப்.

இவர் 'ஈ' படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகம் கொடுத்தார்.  பின் விஜய் நடித்த 'புலி' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தார்.

இந்த படத்தில் விஜயின் நடிப்பை விட இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. 

அதே போல் முதல் முதலாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்  'முடிஞ்சா இவன புடி' படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்திற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடதக்கது.

இவர் நடிப்பது மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகிஸ்தர் என பல, திரையுலகம் சார்த்த வேலைகளை செய்து கலக்கி வருகிறார்.

இதற்கிடையே தற்போது சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இவர் தயாரிக்க இருக்கும் கன்னட சீரியலுக்கு 'வார்சதாரா' என்று பெயரிட பட்டுள்ளது, இந்த சீரியலை, கன்னட திரைப்பட இயக்குனர் கட்டாவிஜி இயக்குகிறார்.இதை கன்னட ஜீ தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனிருத்துக்கு 'MDS' எனப் பெயர் வைத்த தளபதி விஜய்! அப்படின்னா என்னன்னு தெரியுமா? வைரலாகும் பின்னணி!
3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை; பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் திரையுலகம்!