நள்ளிரவு 2 மணி... குரூப் டான்ஸர் வீட்டு கேட்டில் எகிறிய விஷால்...சி.சி.டி.வி ஃபுட்டேஜ் இருக்காம்...

By vinoth kumarFirst Published Nov 12, 2018, 4:47 PM IST
Highlights

குரூப் டான்ஸர் காயத்ரியின் வீட்டுக்கு நள்ளிரவு ரெண்டு மணிக்கு எகிறிவிட்டு அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து தப்பியிருக்கிறார் நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் விஷால்.

பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ், நடிகை ஸ்ரீரெட்டியின் படுவீக்ஸ் பஞ்சாயத்துகளைத் தொடர்ந்து இன்று காலை முதல் காயத்ரி லீக்ஸ் என்றொரு விபரீதமான விவகாரம் வலைதளங்களில் தயங்கித் தயங்கி நடமாடத் துவங்கியிருக்கிறது. தொடர்ந்து ’மி டு’ சமாச்சாரத்திற்கு எதிராகவே பேசிவருவதால் இந்தச் செய்தியை நம்ப முடியவில்லை என்று ஒதுக்கமுடியவில்லை. 

விஸ்வதர்ஷினி என்ற பெண்ணின் ஃபேக் முகவரியில் உள்ள வலைதளப் பக்கத்தில்... ஹல்லோ க்ரூப் டான்ஸர் காயத்ரி சாய் என்று விழித்து ஆங்கிலத்தில் சற்று ஒழிவுமறைவாக எழுதப்பட்ட அந்தப் பதிவின் சாராம்சம் இதுதான்...கோபாலபுரம் பகுதியில் உள்ள அந்த குரூப் டான்ஸர் காயத்ரியின் வீட்டுக்கு நள்ளிரவு ரெண்டு மணிக்கு எகிறிவிட்டு அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறிக் குதித்து தப்பியிருக்கிறார் நடிகர் சங்க மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் விஷால். 

இது அந்த அபார்ட்மெண்ட்ஸ் உள்ள சி.சி.டி.வி. ஃபுட்டேஜிலும் பதிவாகியிருப்பதாகவும், அதை ஒட்டி அந்த காயத்ரியை அபார்ட்மெண்ட் வாசிகள் தட்டிக்கேட்ட போது காயத்ரி ஒரு நல்ல பிள்ளை என்பதால் உடனே தனது வீட்டைக் காலிபண்ணிக் கொடுத்துவிட்டதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இப்படி ஒரு செல்வாக்கான நடிகர் புழங்கிய பகுதியில் பல வருடங்களாக மார்கெட்டே இல்லாத நடிகர் ஸ்ரீகாந்தும், தமிழகத்தின் முன்னணிக்கு அடுத்த இடத்தில் உள்ளவரின் தம்பி புள்ள ஒருவரும் புழங்கி வந்ததாகவும் காயத்ரி லீக்ஸில் காணக்கிடைக்கின்றன.

click me!