வெறித்தனமாக பேசி வசமாக சிக்கிய வைரமுத்து…. இடுப்போ உடுக்கை !! மார்போ படுக்கை !! அம்பலமான ஆடியோ !!

Published : Oct 15, 2018, 10:02 PM IST
வெறித்தனமாக பேசி வசமாக சிக்கிய வைரமுத்து….  இடுப்போ உடுக்கை !! மார்போ படுக்கை !! அம்பலமான   ஆடியோ !!

சுருக்கம்

கவிஞர் வைரமுத்து இளம் பெண் ஒருவரிடம் போனில், உன் இடுப்போ உடுக்கை…மார்போ படுக்கை என ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு ஒன்றை பாடகி சின்மயி வெளியிட்டுள்ளார். தொடர்ந்து ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டில் மட்டுமே சிக்கி வந்த வைரமுத்து, தற்போது ஆடியோ ஆதாரத்துடன்  சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

மீ டு ஹேஷ்டேக்கில் கவிஞர் வைரமுத்து மீது முதன் முதலில் பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தார். இதைத் தொடர்ந்து பல பெண்கள்  வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில்  தந்தை போல் பழகிய இளம் பெண் ஒருவரிடம் கவிஞர் வைரமுத்து காம ரசம் சொட்ட, சொட்ட பேசிய ஆடியோ ஒன்று  வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சின்மயிக்கு ஆதரவாக நடிகைகள் ஸ்ரீரெட்டி, சமந்தா, நடிகர்கள் சரத்குமார், சித்தார்த், விஷால் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர். பெண் அரசியல் வாதிகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசையும், திமுக எம்பி கனிமொழியும் தவறு செய்தவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தனர்.

அதே நேரத்தில் தன்மீது எந்த தப்பும் இல்லை என்றும் அவர்கள் நீதிமன்றம் சென்றால் அங்கு தன்னை குற்றமற்றவன்என நிரூபிப்பேன் என வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இதனிடையே ஐஸ்வர்யா என்ற பெண் சுமத்திய  குற்றச்சாட்டு ஒன்றை  பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவிட் செய்துள்ளார். அதில் பேசிய அந்தப் பெண், தன்னுடைய தோழிக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த ஆடியோவில், ஹலோ வைரமுத்து அவர்களே.. நீங்கள் எனது குரலைக் கேட்டதும் உங்களுக்கு என் ஞாபகம் வந்திருக்கும். நான் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்ற விஷயத்திற்கு வரவில்லை. ஆனால், எனக்கு நல்லா தெரியும் நீங்க தப்பு பண்ணியிருக்கீங்க. நான் என்னுடைய தோழிக்காக இப்ப பேசுறேன்.

அவளுக்கு வயது 24. நீங்கள் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தபோது, எனது தோழி உங்களிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அந்த நேரத்தில் நீங்கள் அவளுடைய போன் நம்பரை கேட்டீங்க. அவளும் அப்பா ஸ்தானத்தில் உங்களை வைத்து போன் நம்பரை கொடுத்தாள் என தெரிவித்துள்ளார். ஆனால்  அன்றிரவு நீங்கள் எனது தோழிக்கு போன் செய்து எவ்வளவு அநாகரீகமாக கவிதை சொன்னீர்கள் என்று தெரியுமா?

'உன் இடுப்போ ஒரு உடுக்கை, உன மார்போ ஒரு படுக்கை'' இந்தக் கவிதை உங்களுடையதுதான். அதை என்னால் நிரூபிக்க முடியும். நீங்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. நீங்கள் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள் என அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இது உண்மையா? இல்லை வைரமுத்துவை மாட்டிவிட உருவாக்கப்பட்டதா என்பது போலீசார் விசாரித்தால் தெரிய வரும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வசூலில் தனுஷ் படத்தை தட்டிதூக்கிய நயன்தாராவின் ‘பேட்ரியாட்’ - முதல் நாளே இத்தனை கோடியா?
Kara Movie Day 2 Box Office: கலெக்‌ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை